

பஸ் டிரைவர் ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் என, ஆறு பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ராம்சிங், திஹார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்; 18 வயது இளம் குற்றவாளி சிறுவன் என்பதால் விடுதலை செய்யப்பட்டான்.மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது; . தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு இன்று தள்ளுபடியானது.
நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில்து : படு தைரியமாக செய்யப்பட்ட இந்த குற்றம் நாட்டுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. கிரிமினல் சதி நடந்ததற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளது. குற்றவாளிகளுக்கு கருணை காட்ட முடியாது. இது அரிதிலும் அரிதான வழக்கு என்று தெரிவித்தனர்.
குற்றவாளிகள் வக்கீல்கள் அலறல்:
குற்றவாளிகளுக்கு
சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏபி சிங் கூறுகையில்; இந்த வழக்கில் நீதி
கிடைக்கவில்லை. யாரையும் தூக்கலிடக்கூடாது. காந்திய கொள்கை
அழிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. தீர்ப்பை ஆய்வு
செய்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தாய் ,தந்தையர் கண்ணீர்:
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது நிர்பயா பெற்றோர்கள் கோர்ட்டில் இருந்தனர்.
தீர்ப்பு குறித்து தாயார் ஆஷா தேவி கூறியதாவது: இந்த தீர்ப்பு
மகிழ்ச்சியளிக்கிறது. நீதி வென்றுள்ளது. நாட்டுக்கு வலிமையான செய்தியை
தீர்ப்பு அனுப்பியுள்ளது. என்றபடி கண்ணீர் விட்டார். நிர்பயா தந்தை பத்ரி
சிங் கூறுகையில், எனது குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பு
எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக