சனி, 6 மே, 2017

டெல்லி பாலியல் வன்முறையின் தலைநகரமாகிறது .. 2016ல் 2,155 பாலியல் வன்புணர்வு .. !


புதுடில்லி:நாட்டின் தலைநகரமாக திகழும் டில்லி கற்பழிப்பின் தலைநகரமாகவும் மாறி வருவதாகவும், தினந்தோறும் குறைந்தபட்சம் 4 பெண்கள் இங்கு கற்பழிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பின்னர், டில்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துகொண்டே வந்துள்ளது என்பது டில்லி போலீசாரின் வழக்குப்பதிவு தொடர்பான தகவல் திரட்டின் மூலம் தெரிய வந்துள்ளது கற்பழிப்பு வழக்குகள்:2013ம் ஆண்டில் 1,636 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள், 2014ல் 2,166 ஆகவும், 2015ல் 2,199 ஆகவும் அதிகரித்துள்ளது. பின்னர், 2016ல் 2,155 சம்பவங்களாகவும், இந்த (2017) ஆண்டில் மார்ச் 15ம் தேதிவரை டில்லியில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் டில்லி போலீஸ் துறையின் ஆவண குறிப்புகளின் வாயிலாக தெரியவந்துள்ளது தினமலர்

கருத்துகள் இல்லை: