சனி, 28 நவம்பர், 2015

ராமதாஸ்: தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிக்கிறார்கள் !

தமிழக அமைச்சர்கள் அண்டை மாநிலங்களில் சொத்து குவிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராம்தாஸ் பகிரங்கமாக குற்றசாட்டினார். ;மேலும் இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவின் முன்னணி பொருளாதார ஆய்வு இதழான இந்தியா ஸபென்ட் தனிநபர் கடனில் தமிழகம் முதலிடம் பெற்றது. இது ஜெயலலிதாவின் புதிய சாதனை. அவர் மது விற்பனையில் முதலிடம் என பல சாதனைகளை செய்தவர்கள். முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என ஓயமாட்டேன் என ஜெயலலிதா சபதம் நிறைவேற்றியுள்ளார். சபதம் நிறைவேற்றும் வகையில் பல வகையில் முதலிடத்தை தமிழகத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் கடன் சுமை குறித்து வெளியிட்டுள்ள அந்த இதழ் 2014 15 வரையில் தனிநபர் கடன் சுமை தமிழகம் முதலிடம் இருப்பது தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனிநபர் சரசாரியாக ரூ 29 ஆயிரமாக உள்ளது.  இது 15-16 ம் ஆண்டில் வாங்கப்பட்ட கடனை சேர்த்தால் தமிழகத்தில் தனிநபர் கடன் சுமை 31132  ஆகும். பொதுத்துறை கடன் 2. 01 லட்சம் கோடி கணக்கில் கொண்டால் தனிநபர் கடன் தமிழக மக்கள் ஒவ்வொருக்கும் 60766 ஆயிரம் மாகும்.  இது ஒட்டுமொத்த தனிநபர் கடன் . கடந்த 5 ஆண்டுகளில் 108 சதவீதம் கடன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 20110 -11 முதல் 14-15 வரை கடந்த 5 ஆண்டுகளில்  92 சதவீதம் உயர்ந்திருப்பதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது. வருவாயில் பெரும் பகுதியை வட்டியாக செலுத்தும் நிலை ஏற்படுத்தியது தான் 50 ஆண்டுகளான திராவிட கட்சிகளின் நிலை. தமிழகத்தில் பொருளாதார நிலை மோசமாக உள்ளதே தவிர ஆட்சியாளர்களின் நிலைமை செழிப்பாக உள்ளது."

;முதல்வர் தோழி சசிகலா இளவரசி குடும்பத்தினர் சென்னையில் 11 தியேட்டர்களை விலைக்கு வாங்கி உள்ளார்கள். அதே போன்று தமிழகத்தில் பல திரையரங்குகளை வாங்குவதற்கு விலை பேசி உள்ளார். தமிழக அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் கர்நாடகம் கேரளம் ஆகிய மமாநிங்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்திலும் நடந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நான் குரல் கொடுத்து வருகிறேன். 18 மிகப்பெரிய ஊழல் பட்டியல் கவர்னரிடம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஐகோர்ட்டில் வழ்ககு தொடர்ந்துள்ளோம்.

இது இப்படியிருக்க ஒரு அ மைச்சர் பேசறார் . நகர செயலாளரே 100 கோடி சொத்து வைத்துள்ள நிலையில் முதல்வர் ஆயிரம் கோடி சொத்து குவித்திருப்பது பெரியவிஷயமாக என்கிறார். ஊழலுக்கு ஊடகங்கள் துணை போக கூடாது. ஆனால் துணை போகிறார்கள். தமிழகத்தில் வெள்ள நீரை வெளியேற்று வதற்காக காவிரியை கர்நாடக அரசு பயன்படுத்தி வருகிறது. தற்போது அதனை சாக்கடையாக மாற்றி வருகிறது. இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.&"

கடந்த பெங்களூரில் சட்டசமசோதாவை மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் பெங்களூரில் தொழிலகங்கள் வீடுகளில் கழிவுநீர் காவிரியில் வெளியேற்றப்படுவதாக தெரிவித்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தமிழகம் சார்பிலல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் தற்போது  கடந்த சிலவாரங்களாக காவிரியில் கழிவுநீரை திறந்து உள்ளனர். இதனால் மேட்டூர் அணை மீன்கள் செத்து மிதந்தன. துõர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால் சென்னை கூவம் போல் காவிரி மாறும் அபாயம் ஏற்படும். ஆற்றுப்படுகை பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் காவிரி 25 லட்சம் ஏக்கர் பாசன ஆதராம் 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

இத்தகையை பெருமை கொண்ட காவிரியிலர் கழிவுநீர் கலப்பது பாவசெயலாகவும். கங்கை ஆற்றில் சுத்தம் செய்வதற்கு மத்திய அரசு 2100 கோடி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் காவிரியை தூய்மைப்படுத்தவும் கர்நாடகம் தமிழகம் இருமாநிலங்களிலும் காவிரி யில் கழீவுநீர் கலப்பதை தனிசிறப்பு திட்டதிதை உருவாக்க வேண்டும். கங்கை தூய்மைக்கு தனி ஆணையம் ஏற்படுத்தியிருப்பது போல் காவிரிக்கு தனி ஆணையம் அமைக்க வேண்டும். இந்த மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  இந்த பகுதியில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கறம்பக்குடி ஒன்றியத்தலைவர் கங்கையம்மாள், சொக்கலிங்கம் ஆகியோர் தாங்கள் பகுதி பிரச்னைக்காக அமைச்சரை சந்தித்து உள்ளனர்.

முத்தரையர் சேர்ந்தவர்களை அவர்களின் சமுதாயத்தை சேர்ந்தவர்களை பெண் பாராமல் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதனை கண்டித்து கடந்த 5ம் தேதி பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முத்தரையர் சமுதாயத்தினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். ஆனால் அந்த போராட்டத்திற்கான அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவமரியாதைக்குள்ளான சொக்கலிங்கம் கங்கையம்மாள் கட்சியில் இருந்து நீக்கத்திற்குள்ளானார். இது சமூக அமைதிக்கு வழிசெய்யாது. அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தி சென்னையில் உலா வந்து கொண்டிருக்கிறது. மதுரை க்கு அடுத்தப்படியாக புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு ரேக்ளா போட்டிகள் நடத்தப்படுகிறது.தமிழகஅரசின் அலட்சியம் காரணமாக கடந்த போட்டிக்ள நடத்தப்பட வில்லை. பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நாடாளுமனத்தில் சட்டச திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய குழு வெள்ள பகுதிகளை முறையாக பார்வையிட வில்லை. ஆனால் அவர்களை சந்திப்பதற்கு இங்குள்ள அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. 940 கோடி போதுமா 20 ஆயிரம் கோடி தேவை என பாமக வலியுறுத்தி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான உண்மையான நிலவரத்தை மத்திய குழுவுக்கு காட்டவில்லை. அவர்களிடம் காட்டி அதிக நிதியை வாங்க வேண்டும்.>பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதி தொடர்பாக குரல் கொடுப்பார். ஜெயலலிதா கடிதம் பிரதமருக்கு போவதுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மத்திய அமைச்சர்கள் கூறியதால் நிதி ஒதுக்கீடு செய்யதார்களே தவிர வெள்ள நிவாரண பணிகளில் அமைச்சர்கள் செயல்பாடுகள் சைபர். மக்கள் நல கூட்டணியின் செயல்பாடு போக போக தெரியும்.

பாமக வைபொறுத்தவரை எங்கள் தலைமை ஏற்று  திமுக அதிமுகவை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். தேமுதிக வந்தால் சேர்த்துக்கொள்ளலாம். மெகா கூட்டணி அமைக்கிறேன் கூறினேர்களே ஜனவரியில் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் திமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தோம். கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் கட்சியில் அங்கம் வகித்துள்ளோம். தொகுதி உடன்பாடு தான் தமிழகத்தில் வைத்துள்ளோம்.
தேர்தல் முடிந்தவுடன் அது முடிந்து விடும். குறைந்த பட்ச செயல்திட்டத்தின் கீழ் மத்தியில் கூட்டணி கட்சிகள் செயல்பட்டன.;">தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எழுத்தாளர்கள் கலைஞர்கள் விஞ்ஞானிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் விருதுகளை திருப்பி கொடுத்துள்ளனர். சிந்தனையாளர் ஒருவர் கர்நாடகவில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது போன்ற நிலைமை இந்தியாவில் எப்போதும் இருந்ததில்லை. இன்டாலரன்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.மக்களை ஒருங்கிணைக்காது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் பல்வேறு குழுக்கள் சமயங்கள் மதங்கள் சமூக நல்லிணக்கம் சமூக ஒருமைப்பாடு பேணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.b>- இரா.பகத்சிங். nakkheeran,in

கருத்துகள் இல்லை: