செவ்வாய், 24 நவம்பர், 2015

இளையராஜாவின் சவால்...இன்றைய இசை அமைப்பாளர்களால் கம்யுட்டரை விட்டு வர முடியுமா?


கம்புடரை விட்டு விட்டு இசையமைக்க வரமுடியுமா என்று இன்றைய இசையமைப்பாளர்களுக்கு MSV நினைவு நிகழ்ச்சியில் இளையராஜா சவால் விட்டுள்ளார்.
 உங்க கிட்டே எல்லா சாம்பிளும் இருக்கிறது .அதை எல்லாம் தூக்கி வீசி விட்டு வாருங்கள் , கம்யுட்டர் சிப்பை யூஸ் பண்ணாதீங்க .உங்க தலைல இருக்கிற சீப்பை யூஸ் பண்ணுங்க.
இந்த சவாலுக்கு நாம் தலை வணங்குகிறோம்.
பெரும்பாலும் இன்றைய பாட்டுக்களின் தொண்ணுறு வீதம் விடயத்தை கம்யுட்டரே கவனித்து கொள்கிறது, மீது பத்து வீதம் கூட திருட்டு சமாச்சாரம்தான். திரை இசைக்கலை செத்து விட்டது. வெறும் சத்தங்களை உரக்க கூவி கூவி விற்கும் வியாபாரம்தான் இன்று நடக்கிறது.
ஒரு பாட்டு கம்போஸ் பண்ணுவதென்றால் முதல்ல ஏதாவது ஒரு பழைய பாடல் அல்லது ஏதாவது ஒரு வெளிநாட்டு டியுனை அப்படியே கேட்க வேண்டியது. அதன் பின்பு அதை அப்படியே ஏதாவது ஒரு வாத்தியத்தில் அல்லது ஒரு வாய்ப்பட்டு சந்தத்தில் கம்யுட்டரில் பதிய வேண்டியது ,
மீதி கம்யுட்டரில் நல்ல நல்ல புரோகிராம்கள் உள்ளன, வேண்டியமாதிரி. அங்கிட்டும் இங்குட்டும் அசைச்சு அசச்சு பார்த்தால் ஏதாவது சகிக்கும் படியாக வருவதை. அதற்கு நெருங்கிய ராகத்திலும் கொஞ்சம் சங்கதிகளை தூவி
ஆர்கேஸ்ட்டிரா மூலம் வாசித்து அதிலும் அப்படியும் இப்படியும் உலாவி உலாவி எதோ ஒரு சாம்பார் சமையல் மாதிரி அவித்து இறக்கி விடுகிறார்கள்.
மிகப் பெரும் பான்மையான பாடல்கள் இப்படித்தான் சினிமா சந்தைக்கு வருகிறது.

 பெரும் ஜனக்கூட்டம் ரசித்து அல்லது ரசிக்கும் மாதிரி பாவனை பண்ணும் பொழுது கொஞ்சமாவது சங்கீத ஞானம் உள்ளவர்கள் பாடுதான் பரிதாபமாகி விடுகிறது .அவர்கள் ஒவ்வொரு  பாட்டையும் அக்கு வேறு ஆணிவேறாக போஸ்மோர்டம் செய்யாமல் இருப்பது மிகவும் கஷ்டம், ஏனெனில் மிக அற்புதமான இசைக்கலை வியாபார கூட்டத்திடம் சிக்கி அதன் அற்புத வடிவத்தை இழப்பது எப்படி சகிக்க முடியும்?
நல்ல இசைவேண்டும் என்று ரசிகர்களும் விரும்ப வேண்டும், நல்ல இசை என்றால் என்னவென்று அவர்களுக்கு இனம் காட்டவேண்டும் .சினிமா வியாபாரிகளும் கொஞ்சம் நல்ல இசையை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கடமை உணர்வோடு தங்கள் படைப்புக்களை உருவாக்கவேண்டும்.

1 கருத்து:

Kaja Bantha Navas சொன்னது…

Direct attack for a r rahman