திங்கள், 23 நவம்பர், 2015

நண்­பி வெட்டி படு­கொலை..அவ­ரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடிய பெண்..நியுயோர்க்

A baby was cut from the womb of a 22-year-old woman who was nearly nine months pregnant by a childhood friend with a knife, and the suspect was arrested on a murder charge, police said Saturday. Angelikque Sutton was found in a pool of blood on Friday at an apartment in the Wakefield section of the Bronx. The suspect, 22-year-old Ashleigh Wade, was taken into custody while screaming that the baby was hers, police said. She was being held on murder, manslaughter and weapons charges. நிறை மாதக் கர்ப்­பி­ணி­யான தனது நண்­பியை கழுத்தை வெட்டி படு­கொலை செய்த பின்னர், அவ­ரது வயிற்றைக் கத்­தியால் கிழித்து அவரது கருப்­பபையிலி­ருந்த குழந்­தையைக் கள­வாடி அதனைத் தனது குழந்­தை­யென உரிமை கோரிய பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் கைது­செய்த அதிர்ச்­சி­யூட்டும் சம்­பவம் அமெ­ரிக்க நியூயோர்க் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.
கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற மேற்­படி சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் ஞாயிற்­றுக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
புரோன்க்ஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த அஷ்லி வேட் (22 வயது) என்ற பெண்ணே இவ்­வாறு தனது நண்­பி­யான அன்­ஜி­லிக்­கியு சட்­டனை (22 வயது) தனது வீட்­டிற்கு வர­வ­ழைத்து படு­கொலை செய்து அவ­ரது கருப்­பை­யி­லி­ருந்த குழந்­தையை கள­வா­டி­யுள்ளார்.
அன்­ஜி­லிக்­கியு சட்­டனைப் படு­கொலை செய்து அவ­ரது குழந்­தையை அஷ்லி கள­வாடி கையில் ஏந்­தி­யி­ருந்த சமயம், அங்கு வந்த அஷ்லியின் காத­ல­ரான ஏஞ்சல் பிரேலோ (27 வயது) அதிர்ச்­சி­ய­டைந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அஷ்லி பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.
மேற்­படி குழந்­தையின் தொப்பூழ்க் கொடியும் அதனை வெட்டப் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த கத்­தியும் அந்த வீட்டின் குளி­ய­ல­றைக்கு அண்­மை­யி­லி­ருந்த ஓடையில் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.
இந்­நி­லையில் அஷ்லி தானும் கர்ப்­ப­ம­டைந்­தி­ருந்­த­தா­கவும் பிறந்த குழந்தை தன்­னு­டை­யது எனவும் ஆரம்­பத்தில் பொலி­ஸா­ரிடம் உரிமை கோரி­யி­ருந்தார்.
அன்­ஜி­லிக்­கியு சட்­டன் எதிர்­வரும் டிசம்பர் 2 ஆம் திகதி குழந்­தையை பிர­ச­விக்க இருந்த நிலையில், முன்­கூட்­டியே அவ­ரது வயிற்றிலிருந்து வெட்டி அகற்­றப்­பட்ட அந்தக் குழந்தை உயிர் தப்­பி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தற்­போது அந்தக் குழந்தை மருத்­து­வ ­ம­னையில் விசேட கவ­னிப்பின் கீழ் வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் குழந்­தைக்கு ஜென்­னஸிஸ் என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் அன்­ஜி­லிக்­கியு சட்­டனின் வாழ்க்கைத் துணை­வரான் பற்றிக் பிரட்லி இந்த சம்­ப­வத்தால் கடும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கி­யுள்ளார். அவரும் அன்­ஜி­லிக்­கியு சட்­டனும் கடந்த 8 வருட கால­மாக இணைந்து வாழ்ந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
தான் கர்ப்­ப­மா­க­வுள்­ள­தாக தனது காத­ல­ருக்கு தெரி­வித்­தி­ருந்த அஷ்லி, தனது பிர­சவ தினம் கடந்த 15 ஆம் திகதி என அவ­ருக்கு கூறியுள்ளார்.
இந்­நி­லையில் அவர் அன்ஜிலிக்கியு சட்டனின் குழந்தையைக் களவாடி அதனை தனக்குப் பிறந்த குழந்தையாக காண்பிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அஷ்லி உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  virakesari.lk/

கருத்துகள் இல்லை: