புதன், 11 நவம்பர், 2015

பர்மா தேர்தல் முடிவுகளை ராணுவம் சகித்து கொள்ளுமா? ஆட்சி அமைக்க ஆன் சான் சூசி பேச்சுவார்த்தை...

பர்மிய தேர்தலில் சரித்திர ரீதியிலான வெற்றியை பெறுகின்ற நிலையில் உள்ள ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணியின் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்கள் தேசிய நல்லிணக்க பேச்சுக்கு வருமாறு இராணுவ ஆதரவு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இராணுவத் தலைவர்களை பேச்சுக்கு அழைக்கிறார் சூச்சி அதற்கான பதிலாக, ஞாயிறன்று நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை தேர்தல் ஆணையம் முழுமையாக அறிவித்து முடிந்த பின்னர் அந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்று அதிபர் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார். தொலைக்காட்சிக்கான செவ்வி ஒன்றில், ஆங் சான் சூச்சியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இதுவரை 40 வீதமான இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 90 வீதமான வாக்குகளை ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி பெற்றுள்ளது. bbc.tamil.com

கருத்துகள் இல்லை: