சனி, 8 ஆகஸ்ட், 2015

ஜார்க்கண்ட் 5 பெண்கள் அடித்துகொலை! மந்திரவாதிகள் என்ற சந்தேகத்தில்... 2000வது ஆண்டிலிருந்து 2012 வரை 2 ஆயிரம் பெண்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்

A group (of villagers) dragged the women out and beat them to death with sticks, accusing them of practising witchcraft,” Ranchi deputy police chief Arun Kumar Singh told AFP through phone.சனிக்கிழமையன்று அதிகாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் ராஞ்சியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மந்தர் என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரவில் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இந்தப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்களை விட்டுவிடும்படி கோரியும்,
கற்களாலும் இரும்புக் கம்பிகளாலும் அந்தப் பெண்கள் அடித்துக் கொள்ளப்பட்டனர்.

2000வது ஆண்டிலிருந்து 2012 வரை கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் சூனியக்காரிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அம்மாநில பெண்கள் ஆணையம் இந்தக் கொலைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
படித்த இளைஞர்கள்கூட இம்மாதிரி கூட்டங்களில் சேர்ந்துகொண்டு, பெண்களை அடித்துக்கொல்வதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கிறார்  bbc.com/tami

கருத்துகள் இல்லை: