சனி, 8 ஆகஸ்ட், 2015

ஒடிசா போலி சாமியார் சாரதி பாபா கைது


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மிகவும் பிரபலமாக இருந்த போலி சாமியாரான சாரதி பாபா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பல்வேறு மோசடிகள், குற்றங்களில் ஈடுபட்டக் குற்றத்துக்காக சாரதி பாபாவை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது பலரையும் ஏமாற்றி பணம் பறித்ததாக பல வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அவரது ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனையில்,  ரொக்கப் பணம், ஏராளமான தங்க, வெள்ளி நகைகள், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com 

கருத்துகள் இல்லை: