சனி, 8 ஆகஸ்ட், 2015

சண்டி வீரன் சிங்கப்பூரில் தடை! வண்டவாளம் வெளியே வருவதால் சிங்கப்பூர் கோபம்?

அதர்வா, ஆனந்தி நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் நேற்று வெளிவந்த படம் சண்டி வீரன். இப்படத்திற்கு கிராம பகுதிகளில் நல்ல வரவேற்பு இருந்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தை சிங்கப்பூரில் தடை செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஏனெனில் ஹீரோ சிங்கப்பூரில் வேலை செய்து விசா முடிந்து அங்கு தங்கியிருந்ததால் போலிஸிடம் பிடிப்பட்டு சிறையில் உள்ளார். அங்கு அடி வாங்கி கொண்டு ஊருக்கு வருவது போல் காட்சிகள் இருக்கும். இதனால் சிங்கப்பூர் தண்டனையை இப்படி படத்தில் வெளிப்படையாக காட்டுவதால் படத்தை அங்கு தடை செய்திருப்பதாக கூறப்படுகின்றது.  cineulagam.com

கருத்துகள் இல்லை: