திங்கள், 4 மே, 2015

மற்றொரு அதிகாரி தற்கொலை! அதிமுகவினரின் கமிஷன் வேட்டையால் செத்து கொண்டிருக்கும் நிர்வாகம்

திருவாரூர் : நெருக்கடி காரணமாக நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூதாகரமாகி உள்ள நிலையில், சென்னையில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஊரக வளர்ச்சித்துறை மேற்பார்வையாளராக இருக்கும் முத்துகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்ற அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார் தினமலர்.com

கருத்துகள் இல்லை: