செவ்வாய், 2 செப்டம்பர், 2014

குரு உத்சவ் தினத்தை அரசியல் ஆக்க கூடாதாம் ? ஸ்மிருதி இராணி கோபம் !

'மத்திய அரசு அறிவித்துள்ள, 'குரு உத்சவ்' ஆசிரியர் தினத்தன்று நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு தான். கட்சித் தலைவர்கள், இதில் அரசியல் ஆதாயம் தேட நினைத்தால், அது கண்டிக்கத்தக்கது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:வரும் 5ம் தேதி, கொண்டாடப்பட உள்ள ஆசிரியர் தினத்தன்று, டில்லியில், பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளார். மாணவர்களின் கேள்விகளுக்கு, மோடி பதிலளிப்பதை, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பார்க்க வசதியாக, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.மாலை 3:00 முதல் 4:45 மணி வரை, இந்த நிகழ்ச்சி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும்படி, எந்த மாணவரையும் கட்டாயப்படுத்தவில்லை. அது, அவர்களின் சொந்த விருப்பத்தை பொறுத்தது. இதை கட்சித் தலைவர்கள் அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது. மொதல்ல யாராச்சும் படிச்சா பொண்ணா பார்த்து இந்த பதவியை கொடுங்கப்பா  ! கவர்சிக்காக பதவி கொடுக்கும் பழக்கம் எம்ஜியாரோடு போகட்டும்
ஜனநாயக நாட்டில், பிரதமர், அந்நாட்டு மாணவர்களை சந்தித்து பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எந்த வகையில் நியாயம்?'குரு உத்சவ்' என்பது, ஆசிரியர் தினத்தன்று நடத்தப்படும் கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு. இதை, மாணவர்கள், அவரவர் தாய் மொழியிலேயே எழுதலாம்.

'டீச்சர்ஸ் டே':

இதை கட்சித் தலைவர்கள் திரித்து பேசி வருகின்றனர். வழக்கம் போல், ஆசிரியர் தினம், 'டீச்சர்ஸ் டே' என்ற பெயரிலேயே கொண்டாடப்படும். இந்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்க, ஏற்கனவே பல லட்சம் மாணவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.தங்கள் குருவை போற்றி, அவர்களின் பெருமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் அரசியல் செய்வதை, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; கண்டிக்கத்தக்கது.இவ்வாறு, அவர் கூறினார். தினமலர்.கம

கருத்துகள் இல்லை: