சனி, 6 செப்டம்பர், 2014

பயங்கரவாதிகளுடன் சேர இருந்த ஆந்திர இளைஞர்கள் சிக்கினர்

ஐதராபாத்: சமூக வலைதளங்களில் வெளியாகும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகளின் அழைப்புகளால் ஈர்க்கப்பட்ட, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஈராக் செல்ல முற்பட்ட போது, அவர்களை ஆந்திர போலீசார் பின்தொடர்ந்து சென்று மீட்டனர்.ஐதராபாத்தை சேர்ந்த, இன்ஜினியரிங் படித்த இரு இளைஞர்கள் உட்பட, நான்கு இளைஞர்களின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்த அவர்களின் பெற்றோர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.ஐதராபாத்திலிருந்து கோல்கட்டா சென்று அங்கிருந்து நேபாளம் வழியாக, ஈராக் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததை அறிந்த போலீசார், அவர்களை பிடித்து, அறிவுரை கூறி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இளைஞர்களின் எதிர்காலம் கருதி, அவர்களின் பெயர், முகவரியை போலீசார் வெளியிடவில்லை. dinamalar.ocm

கருத்துகள் இல்லை: