திங்கள், 8 செப்டம்பர், 2014

துணை நடிகர் கொலை: தலைமறைவாக இருந்த நடிகை கைது

சென்னையில் துணை நடிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த நடிகை சுருதி என்ற சந்திரலேகா பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி அருகேயுள்ள பரப்பாடியைச் சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரின்ஸ் (36). இவர், ஆன்லைன் வர்த்தகம் செய்ததோடு, சென்னையில் மதுரவாயலில் தங்கியபடி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவரிடம் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரும் வட்டிக்கு கடன் வாங்கினர்.
இதன்மூலம் சில திரைப்படங்களுக்கும் பிரின்ஸ் நிதியுதவி செய்தார். திரைப்படத் துறையினரிடம் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் "கொக்கிரகுளம்', "நெல்லை மாவட்டம்' ஆகிய திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.
ஆனால் இந்த படங்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் பிரின்ஸýக்கு, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகை சுருதி என்ற சந்திரலேகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
பிரின்ஸ் செல்வச் செழிப்பாக இருந்ததினால் சுருதி அவருடன் நெருக்கமாகப் பழகியதாகக் கூறப்படுகிறது. இருவரும் மதுரவாயல் எஸ்.ஆர்.எஸ்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து கணவர்-மனைவி போல வாழ்ந்தனர்.
திடீர் மாயம்: இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி பிரின்ஸின் சகோதரர் ஜஸ்டின், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தனது சகோதரர் பிரின்ûஸ காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
ஜஸ்டின் புகார் அளித்த சில நாள்களுக்கு பின்னர் சுருதி, தனது கணவரைக் காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையே பாளையங்கோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில், பிரின்ஸின் சொகுசு காரை நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அவரைப் பிடித்து விசாரித்தனர்.
இதில் பிரின்ஸின் பழைய நண்பர் திருநெல்வேலியைச் சேர்ந்த உமாச்சந்திரன் என்பவர் தான், அந்தக் காரை சுனில்குமாருக்கு விற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் உமாச்சந்திரனின் நண்பர்கள் ஆனஸ்ட்ராஜ் என்ற சதாம், காந்திமதிநாதன் என்ற விஜய், ரபீக் உஸ்மான் கனி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் 3 பேர், உமாச்சந்திரன், நடிகை சுருதி உள்பட 6 பேர் சேர்ந்து கடந்த ஜனவரி 18-ம் தேதி மதுரவாயல் எஸ்.ஆர்.எஸ்.நகரில் உள்ள வீட்டில் பிரின்ûஸ விஷ ஊசி போட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து, பின்னர் அவர் சடலத்தை காரில் கடத்தி பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஐ.ஓ.பி. காலனி அருகே புதைத்ததாக தெரிவித்தனராம்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் கைதுசெய்து, பிரின்ஸின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும், இந்த வழக்கு பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து, மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
8 மாதங்களுக்கு பின்னர் கைது: இதற்கிடையே இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் உமாச்சந்திரன், நடிகை சுருதி உள்ளிட்டோரைக் கைது செய்ய கோயம்பேடு உதவி ஆணையர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் நடிகை சுருதி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. போலீஸார் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தன்னை பிரின்ஸ் ஆபாச திரைப்படங்களில் நடிக்கக் கோரி சித்திரவதை செய்ததாகவும், அடிக்கடி அடித்ததாகவும் தெரிவித்தாராம்.
இதனால் ஏற்கெனவே பிரின்ஸால் ஏமாற்றப்பட்ட உமாச்சந்திரன் மூலம் பிரின்ûஸ கொலை செய்ததாகவும் சுருதி கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டபோது, அவரிடமிருந்த ரூ. 75 லட்சம், தங்கம்,வைர நகைகள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள உமாச்சந்திரன் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். dinamani.com

கருத்துகள் இல்லை: