வெள்ளி, 19 ஜூலை, 2013

டெல்லி கற்பழிப்பு வழக்கு: சிறுவன் மீதான திருட்டு குற்றம் நிரூபணம்

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இளம் குற்றவாளி மீது டெல்லி சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிறுவன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக அவருக்கு 3 ஆண்டுகள் வரைதான் தண்டனை கிடைக்கும். ஆனால், மற்ற குற்றவாளிகளை விட அந்த சிறுவன் கொடூரமாக நடந்து கொண்டதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. எனவே, அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.< இந்நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் மீது திருட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்வதற்கு முன்னால், அதே பஸ்சில் அழைத்து வந்த தச்சுத் தொழிலாளியிடம் பணத்தை கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.malaimurasu.com

கருத்துகள் இல்லை: