ஞாயிறு, 14 ஜூலை, 2013

கல்யாணமே வேண்டாம் ! எல்லாரும் ஏமாத்துறாங்க ! நயன்தாரா அதிரடி!

நயன்தாரா மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் அதனால்தானோ என்னவோ அவருக்கு வாய்த்த சினிமா காதலர்கள் எல்லாம் அவரை நோகடித்து ஏமாற்றி விட்டார்கள். எல்லா கூத்தும் ஆடிவிட்டு இப்போ தத்துவம் பேசும் கேடி பிரபுதேவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “ என் வாழ்வில் இதுவரை நடந்தெல்லாம் விதியின் வசத்தால் நடந்தது. மனிதனுக்கென விதியொன்றை எழுதி அதன்படி மனிதனை ஆட்டிவைக்கிறார் கடவுள். என் விதிப்படி எல்லாம் நடந்துவிட்டது. இப்போது நன் சந்தோஷமாக இருக்கிறேன். இனி என் வாழ்க்கையை என் மகன்களுக்காக வாழ்கிறேன்” என்று கூறிவிட்டார்.பிரபுதேவா கூறியதைப் போலவே நயன்தாராவும் “என் வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்கள் நடந்துவிட்டன. அவற்றிலிருந்து வெளியே வந்து இப்பொழுது நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.ஆர்யா எனக்கு நல்ல நண்பன் மட்டும் தான். ஆனால் பலரும் எங்களைப் பற்றி தவறாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.என் வாழ்க்கையில் இனி காதலுக்கு இடமில்லை. ;தனியாக இருக்கும்பொழுதே நான் நிம்மதியாக இருக்கிறேன். கடைசி வரை இப்படியே இருந்துவிடலாம் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறாராம்.

கருத்துகள் இல்லை: