சனி, 20 ஜூலை, 2013

பாஜக மாநில நிர்வாகி ரமேஷ் படுகொலை! !

19.07.2013 வெள்ளிகிழமை இரவு 9.40 அளவில் சேலம் மரவனேரி முதல் கிராசில் உள்ள அலுவலக வாசலில் உடல் சரிந்து கிடந்தார் பா.ஜ.க மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ். உடலெங்கும் பலத்த வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருக்க ‘எப்பவுமே சிரிச்ச முகமா இருப்பாரே நம்ம தலைவரை சிதைச்சுட்டானுங்களே!’ என திரண்ட பா.ஜ.க.வினர் கதறி அழுதனர். அந்த அக்ரகார வீதியில் அனைவரும் கதவை சாத்தியபடி உள்ளே இருக்க ‘உங்களுக்காகவும் தான போராடினார்’ என கதறினர்நாம் சேலம் மாவட்ட செயலாளர் கோபிநாத்திடம் நம் இரங்கலை தெரிவித்துவிட்டு பேசினோம்.‘யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவரு. ரொம்ப தங்கமான மனுசர். அவரை கோபமான தோற்றத்தில் யாரும் பார்துருக்கவே முடியாது. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பார். ல்லோரையும் அனுசரித்து செல்பவர். கொள்கை வேறு நட்பு வேறு என மாற்று கொள்கை கொண்ட அமைப்பினரிடமும் நட்பு பாராட்டுபவர். கிட்டத்தட்ட இருவத்தி அஞ்சு வருஷமா இயக்கத்தில இருக்காரு. இந்துகளின் வளர்ச்சிக்காகவே எந்நேரமும் சிந்திசுகிட்டே இருப்பாரு. ரோட்டுல போகும் போது வீட்டு வாசல்களில் கோலம் போடப்பட்டு இருந்தால் அதில் கார் சக்கரம் ஏறாதபடி எப்படியாவது தள்ளி செல்வாரு.
கஷ்டப்பட்டு கோலம் போட்டு இருக்காங்க இது நம் பாரத பெண்களின் ஆன்மிகம் நிறைந்த ஓவிய கலை நாம இதுல காரை ஏற்றினால் அவர்கள் இதயத்தில் ஏற்றியது போல அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுனு’  சொல்லும் உயர்ந்த மனிதர். அந்த மனிதநேயத்தை தான் படுபாவிங்க சாச்சுட்டானுங்க. குடும்பத்தோட டின்னர் போயிட்டு அலுவலகம் திரும்பியவர கொன்னுட்டானுங்க. திட்டம் போட்டு தான் செஞ்சுருப்பானுங்க. இந்துகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. நியாயம் கிடைக்கணும் என குமுறினார்.

விவரம் அறிய இரவு நேரத்திலேயே ஆடிட்டர் ரமேஷ் அலுவலகம், அருகில் உள்ள வீடு நோக்கி கட்சியினர் திரள தொடங்கினர்.

கருத்துகள் இல்லை: