வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

இதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு

மகனுக்கு மணிமுடி எதிர்த்தால் செருப்படி, மகுடம் சூட்டுவேன் பாருங்கள் , தெம்பு இருந்தால் தோள் கொடுங்கள், திராணி இருந்தால் மோதிப்பாருங்கள். கழகக் கண்மணிகளே, இதுதான் கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு . புரிந்து கொள்ளுங்கள், அலை கடலென திரண்டு வாருங்கள். 
 குடும்பக்கட்சியில் வேறு யாரும் தலையிட முடியாது என்பதை செருப்பால் அடித்து சொல்கிறார்கள் நம் கழகக்கண்மணிகள்...
நம் தமிழ் நாட்டிற்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ஒரு சாதாரண சினிமாவிற்கு ஒரு கூட்டம் மிரட்டுகிறது, இன்னொரு பக்கம் இலங்கை பிரச்சனைக்காக எக்மோரில் உள்ள வங்கியை ஒரு கூட்டம் அடித்து நொறுக்குகிறது (அதையும் சிலர் ஆதரிக்கிறார்கள்) எஸ் வி சேகர் விடுதலை புலிகளை பற்றி சொன்ன ஒரு கருத்துக்காக அவர் வீட்டின் மீது ஒரு கூட்டம் கல் எறிகிறது, வேறு ஒரு பக்கம் குஷ்பூ சொன்ன ஒரு பேட்டிக்காக அவர் விட்டின் மேல் கல் எறிகிறது ஒரு கூட்டம் (அதுவும் அவர் பிள்ளைகள் மட்டுமே விட்டில் இருக்கும் போது) என்னக்கு என்னமோ நாம் பாகிஸ்தான் காஷ்மீர் பாதையில் போய் கொண்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் வருகிறது, சகிப்பு தன்மை இல்லாத வன்முறை கூட்டமாக நாம் மாறிக்கொண்டு இருக்கிறோமோ ? நடப்பவை எதுவும் தமிழக நலனுக்கு நல்லது அல்ல. 

கருத்துகள் இல்லை: