அர்ச்சகர்கள்
னைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பான வழக்கு வரும் 20-2-13 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வருகிறது.
நீதிபதிகள் லோதா, செல்லமேஸ்வர் ஆகியோர் வழக்கறிஞர்களிடம் “ஒரு தேதியை சொல்லுங்கள் அன்று முழுமையாக வாதத்தை கேட்கிறோம்” என்று கேட்டனர். சிவாச்சாரியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களிடமும் அரசு தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் அவர்களிடமும் அர்ச்சக மாணவர்கள் தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா மற்றும் காலின் கான்சால்வேஸ் அவர்களிடமும் உறுதிப்படுத்தி இந்த தேதியை குறித்தனர்.
பெரியார் அறிவித்த கருவறை போராட்டக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு கோவிலில் வாரிசுரிமை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றுவரை பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் அர்சச்கராக முடியவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 2006ம் ஆண்டு அதற்கான சட்டத்தை  தமிழக அரசு கொண்டு வந்த வேகத்தில் மதுரை பார்ப்பன சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பெரியாரின் போராட்டம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதே பிரச்சினை நேரடியாக நம்முன் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு
  • ‘பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்’ என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் முக்கிய வழக்கு.
  • சாதித் தீண்டாமையை பாதுகாக்கும் ஆகமம் பெரிதா? தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் அமைப்பு சட்டம் பெரிதா? என்பதை தீர்மானிக்கவிருக்கும் முக்கிய வழக்கு.
அன்று அரசும் பார்ப்பன அர்ச்சகர் தரப்பும் மட்டுமே வழக்கை நடத்தியதால் 1970ல் வெற்றி பெற்றும் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டோம். இன்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தரப்பில் நாம் மூன்றாவது தரப்பாக வாதிட உள்ளோம். கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது வாதம்.
அரசு ஒரு நாளும் பார்ப்பனர்களுக்கு எதிராக இந்த வாதத்தை முன்வைக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தகுதி உடையவர்கள் யாராக இருந்தாலும் சாதி பார்க்காமல் அர்ச்சகர் பணி நியமனம் வழங்க வேண்டும்; அர்ச்சகர் வேலையும் பொது வேலைவாய்ப்புதான்; அதில் பிறப்பை மட்டும் தகுதியாக பார்ப்பது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு என்பதையும் வாதிட உள்ளோம்.
வழக்கு செலவுகளுக்காக நிதி வழங்கி அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:
KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க்கிங் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.
Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings