சனி, 9 பிப்ரவரி, 2013

மணிரத்னத்தின் கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு”

மணிரத்னம் வீட்டுக்கு போலீஸ் காவல்! “ஏம்பா.. சரக்கை பார்த்து வாங்க மாட்டீகளா?”

Viruvirupu
“ஆச்சரியமாயிருக்கே… இந்த ஒரு கடல் எத்தினி பேரை மூழ்கடிச்சிருச்சு” “மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் நீந்தப் போய் மூழ்கிய விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் மணிரத்னம் வீடு மற்றும் அலுவலகத்தில் மையம் கொள்வார்கள் என்று தெரியவருகிறது” என்று இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். முற்றுகைக்கு முன் சில பேச்சுவார்த்தைகள் போன் மூலமும், மற்றொரு தரப்பு மஸ்தியஸ்தத்திலும் நடந்ததாக தெரிகிறது. இவற்றில் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால், வீட்டை முற்றுகையிடுவதை தவிர வேறு வழியில்லை என விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து மணிரத்னம் கேட்டாரா, அல்லது வேறு ஏற்பாடா தெரியவில்லை, மணிரத்னம் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
கடல் படம் வெளியான முதல் நாளே அதன் ரிசல்ட் தெரிந்து விட்டது. ஆனால், சோகம் என்னவென்றால், எடுத்த படத்தை போட்டுக் காட்டாமலேயே மணி விற்றுவிட்டார். மணிரத்னத்தின் ஓவர் பில்ட்-அப்பை பார்த்து கோடிகளை கொட்டிக் கொடுத்தவர்கள், இப்போது தேள் கொட்டிய நிலையில் உள்ளார்கள்.
ஏம்பா.. மீன் வாங்கும்போதே பார்த்து வாங்குவீங்க.. கடல் வாங்கும்போது பார்த்து வாங்க மாட்டீகளா?

கருத்துகள் இல்லை: