மின்னம்பலம் : மதுரை, திருமங்கலத்தில் ஆசிரியர் திட்டியதால் நான்கு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் PKN பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் நான்கு மாணவிகள் வகுப்பில் சரியாக படிப்பதில்லை என்றும், அதனால் ஆசிரியர் அவர்களைக் கடுமையாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த அந்த மாணவிகள் நால்வரும் எலி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை
மதுரை அருகேயுள்ள திருமங்கலத்தில் PKN பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் நான்கு மாணவிகள் வகுப்பில் சரியாக படிப்பதில்லை என்றும், அதனால் ஆசிரியர் அவர்களைக் கடுமையாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த அந்த மாணவிகள் நால்வரும் எலி மருந்தைக் குடித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடைபெற்றுவருகிறது.
இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை





















