ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

புதுச்சேரி: `ஒரே நாளில் இரண்டு விக்கெட்!’ - எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவால் காங்கிரஸ் அதிர்ச்சி

நாராயணசாமி
vikatan.com ஜெ.முருகன் : புதுச்சேரி அரசு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருந்த நிலையில், இன்று காங்கிரஸ் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்திருப்பது காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக 2 அமைச்சர்களும், 2 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் பலம் 14-14 என்ற விகிதத்தில் சமமான நிலை ஏற்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 15-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தலைமயில் கூடிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கமல் ரஜனி சந்திப்பு ! பேசிய அரசியல் என்ன? ஜீவ சகாப்தன் அதிரடி

3-வது அணி உருவாக வாய்ப்பு: கமல் ஹாசன்

கமல் ஹாசன்
மாலைமலர் : சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* 3-அணி அமைய வாய்ப்பு. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் கூடி வருகின்றன.    திமுக-வில் இருந்தும் பேச்சுவார்த்தை நடந்தது. தூது வருவதை கருத்தில் கொள்ள முடியாது. தலைமை மட்டத்தில் இருந்து வந்தால்தான் உறுதி.
* நல்ல விசயங்கள் எங்கு இருந்தாலும் தேடி எடுத்துக் கொள்வோம்.
* தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் வரலாம்
*  நல்லவர்கள் எங்களுடன் சேர வேண்டும். கதவுகள் திறந்தே உள்ளன.
*  ரஜினியுடன் நலம் விசாரித்ததோடு சரி. அரசியல் குறித்து அவரிடம் ஏதும் பேசவில்லை. வாய்ஸ் கொடுக்க நினைத்தால், ரஜினிதான் கொடுக்க வேண்டும். வாய்ஸ் என்பது கேட்டு பெறுவதல்ல. கூட்டணிக்குத்தான் பேச்சுவார்த்தை தேவை..    இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்தார்.

ஸ்டாலின் : மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து... கசிந்த ரகசியம்?

Jeyalakshmi C  - tamil.oneindia.com : கோவை: திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
பொள்ளாட்சியில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை பெற்றுள்ள நகை கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு கடன் ரத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். 
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அறிவித்தார் மு.க ஸ்டாலின். அந்த அறிவிப்பு வெளியாக சில வாரங்களில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். 
கொரோனா, புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே.வங்க பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி 100 கிராம் கொக்கையினோடு கைது

minnamblam : பாஜகவின் மேற்கு வங்கப் பெண் பிரமுகரான பமீலா கோஸ்வாமி, கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்தார் எனக் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, அந்த மாநிலத்தின் புதிய பரபரப்பு. பாஜக இளைஞர் அணி மாநிலச்செயலாளராக இருந்துவரும் பமீலா, கொல்கத்தாவின் புது அலிப்பூர் பகுதியில் கடந்த வெள்ளியன்று காரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவருடைய காரிலும் கைப்பையிலுமாக 100 கி. கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்தார் என்பது போலீசின் குற்றச்சாட்டு. பமீலாவுடன் அவரின் நண்பர் புரொபிர் குமார் தேயும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வழக்கமாக அரசியல்வாதிகள் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டால், எதிர்க்கட்சியின் சதி எனக் கூறுவது வழக்கம். அதற்கான வாய்ப்புகளும் அதிகம். பமீலாவோ தன் கட்சி சக நிர்வாகியான ராகேஷ் சிங் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். பாஜகவின் மாநிலக் குழு உறுப்பினரான ராகேஷ் சிங்தான் தன் மீதான வழக்குக்கு பின்னணிக் காரணம் என்பது பமீலாவின் குற்றச்சாட்டு.

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க நமச்சிவாயம் பாஜகவில் புகலிடம்!·


  • /tamil.samayam.com : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதி, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு.
  • சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சமபலமாக இருப்பதால், வரும் 22 ஆம் தேதி காங்கிரஸ் அரசு தனது பெரும்பாண்மை நிரூபிக்க துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

புத்தரின் பஞ்சசீல (ஒழுக்கம்) கொள்கையை பின்பற்றியதால் பஞ்சமர்கள் என்றனர் .. புத்தர் சிலைகளின் தலைகளை அகற்றி யானை தலைகளை ஒட்டி விநாயகர் என்றனர்

Sivakumar Shivas : · *நாம் யார்? நம் வரலாறு என்ன? என்பதை தெளிவாக புரிந்து கொள்ளவும்.* சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்... * நாக வம்சத்தினர் காலத்தில்தான் அரப்பா,மொகஞ்சதரோ,காளிபங்கன், போன்ற சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...
* அப்போது, நாடோடிகளாக, ஆடு,மாடுகளோடு வந்த ,வெளிறிய ஆரியர்கள் ..இங்கு நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டனர்...
* நீண்ட காலப் போரில் ஈடுபட்டனர்.நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து,அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கினர்...
* வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையைக் கடைப்பிடித்து...சில ராஜ்யங்களைக் கைப்பற்றினர்..
* பிறகு வேதங்களைச் சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..
* பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு, யாக குண்டத்தில் சிறிது போட்டு யாகம் வளர்த்தனர்...பலியான மிருகங்களை சமைத்து விருந்துண்பார்கள்.
* ரிக் வேதங்களில் ,மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிடப் பட்டுள்ளது..
* மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..
* பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து, அரசர்களை, மக்களை அடிமை படுத்தினார்கள்.

சனி, 20 பிப்ரவரி, 2021

காந்தி சிலை - கரூர் எம்பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்

minnambalam : கரூரில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கரூர் பயணத்தை ஒட்டி அகற்றிவிட்டு புதிய சிலையை வைக்க முயன்றிருக்கிறார்கள்.ஆனால் எவ்வித அனுமதியும் நிர்வாக நடைமுறைகளுமில்லாமல் அந்த காந்தி சிலை அகற்றப்பட்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி நேற்றே குற்றம் சாட்டினார். மேலும் புதிய சிலைக்கான பீடம் மிகவும் பலவீனமான முறையில் தரமற்ற பொருட்கள் கொண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இன்று இதைக் கண்டித்து காங்கிரஸார் சார்பாக போராட்டம் நடைபெற்றபோது ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர் போலீசார். இதனால் நிலைகுலைந்து போன ஜோதிமணி போலீஸுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பினார். இது கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது,

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின்

“மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின்
kalaignarseithigal.com : “மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்கள் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ.யிடம் நியாயம் கிடைக்கவில்லை என்றால், கழக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்; சட்டத்தின் பிடியில் இருந்தும், இந்த ஸ்டாலினிடமிருந்தும் இந்த வழக்கில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வினர் தப்பவே முடியாது." என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (20-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், பொள்ளாச்சி - கோவை ரோடு, சங்கம்பாளையம் - ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற, கோவை கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

40 சீட்டுகள்! கட்சிகளை இணைத்து காட்டுகிறேன் பழிவாங்க மாட்டேன் சசிகலா உத்தரவாதம் ..எடப்பாடி மறுப்பு ? புரோக்கர் அமித் ஷா பேச்சு தோல்வி?

 பொதுச்செயலாளர்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: மலையளவுக்கு ஆசைப்பட்ட சசிகலா, இப்போது கடுகளவாவது ஏதாவது நல்லது நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "40" சீட்டுகள்..! சசிகலா சென்னைக்கு வருவதற்கு முன்பிருந்தே, தமிழக அரசியலில் களை கட்டி வருகிறது.. ஜெயிலுக்கு போய்விட்டு வருவதால், அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் ஆதரவு தனக்கு ஏராளமாக இருக்கும் என்று கணக்கு போட்டார் சசிகலா. 

சென்னைக்கு காரில் வந்த அன்றும், 23 மணி நேர தொண்டர்களின் வரவேற்பை பார்த்து மிரண்டும் போய்விட்டார்.. அதனால், எப்படியும் அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தாவி வருவார்கள் என்று நினைத்தா சசிகலா "கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என்று செய்தியாளர்களிடம் வேனில் உட்கார்ந்தபடியே சொன்னார்.. அதிமுகவில் ஒருபுயலே வீச போகிறது என்ற ரீதியில் எதிர்பார்ப்பும் கிளம்பியது. ஆனால். ஒன்றுகூட நடக்கவில்லை.. எல்லாமே புஸ்ஸென்று போய்விட்டது. எதனால் சசிகலா அமைதியாக இருக்கிறார்? ஏதோ பெரிய அளவுக்கு மெகா பிளானை தீட்டி வருகிறார் என்ற யூகங்கள் இன்றும் வலம் வருகின்றன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்.. மூன்றாண்டுகளாக போராடியும் மதிக்காத மத்திய அரசு”

nakkheeran.in : கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்குப் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் விரும்பும் கட்சிகளின் சார்பில் பல கட்டமாக போராட்டமும், எதிர்ப்பும் இருந்து வந்தது. அதனைக் கண்டுக்கொள்ளாத மத்திய அரசு, 2 அணு உலைகளைக் கட்டுமானம் செய்து செயல்படுத்தி வருகிறது. இன்றளவும் இதற்கு எதிர்ப்புகள் இருந்தும் அதனை ஒரு துளி அளவும் கவனிக்காமல், கருத்தில் கொள்ளாமல் மேலும் 2 உலைகளை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

 இதனைக் கண்டித்தும், எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, “ஒருபுறம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அரசு அறிவித்து வரும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைக்க, எல் அண்ட் டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது அதிர்ச்சியளிக்கிறது.

புதுச்சேரியில் திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக

திமுக-காங்கிரசை சேர்த்துவைத்த பாஜக

minnambalam :புதுச்சேரியில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்திருந்த நிலையில், தற்போதைய தனது நடவடிக்கைகள் மூலம் இந்த இரு கட்சிகளையும் மீண்டும் ஒன்றிணைத்துள்ளது பாஜக.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ்- திமுக இணைந்து போட்டியிட்ட 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 2 மொத்தம் 17 எம். எல்.ஏ. க்களுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதல்வரானார் நாராயணசாமி.   கடந்த ஆறு மாதங்களாகவே முதல்வர் மீது அதிருப்தியான திமுகவினர் காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுவந்தார்கள். ஒரு கட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.   புதுச்சேரி திமுக நிர்வாகிகள் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினை ஒன்றாக சென்று அறிவாலயத்தில் சந்தித்து, ‘புதுச்சேரியில் திமுக தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்று வலியுறுத்தினார்கள்.

134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு...

134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
maalaimalar : 134 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை: தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். கலைமாமணி விருது பெறுவோருக்கு பரிசாக 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல் கலைமாமணி விருது பெற்ற, வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்தியன் 2. இந்த பிரம்மாண்டத்திற்கும் ஊழலுக்கும் தொடர்பேயில்லை. நம்புங்கள்... ஜீவசகாப்தன்

May be an image of Jeeva Sagapthan and tree
Jeeva Sagapthan : · ஊழல் ஒழிப்பையே லட்சியமாகக் கொண்டவர்களுக்கான கடந்த ஆண்டு பதிவிட்ட பதிவு.... பிரம்மாண்ட சினிமாக்களின் படு கொலைகள் - ஜீவசகாப்தன்
தொடக்க காலத்தில் வசனங்கள் வழியே கதை சொன்னார்கள். பின்னர் காட்சிகளின் வழி பேசினார்கள். 90 களுக்குப் பிறகு தொழில் நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துகிறோம் என்ற பெயரில் பிரம்மாண்ட சினிமாக்கள் அதிகம் வரத் தொடங்கின. கதையை விட கிராபிக்ஸ் காட்சிகளும், ஒலி அமைப்பு முறையும் அதிகம் பேசப்பட்டன. திரைப்படங்களில் எதார்த்தம், மண்ணுக்கேற்றத் தன்மை, ஊர் அமைப்பு எதுவும் தேவையில்லை. பிரம்மாண்டம் என்ற ஒன்று போதும் என்ற மனநிலையை இளைஞர்களுக்கு உருவாக்கினார்கள்.
அப்படி ஒரு மனநிலையை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஷங்கர். அரசியல்வாதிகளின் ஊழலும், உதிரி தொழிலாளர்களின் அலட்சியமும்தான் நாட்டின் அவலத்திற்கு காரணம் என்பதுதான் இவருடைய படங்களின் சாரம்சமாக இருக்கும். இந்த உண்மையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக, பல கோடி ரூபாயைச் செலவழிப்பார். அதற்காக, சினிமா டிக்கெட்டுகளும் பல மடங்கு அதிகமாக விற்கப்படும். என்ன செய்ய? அரசியல்வாதிகளின் ஊழலை ஒழிக்க ஷங்கர் பிரம்மாண்டமாகச் செலவு செய்கிறார். அவ்வளவுதான்.
பாய்ஸ் படத்தில் தன் காதலை வெளிப்படுத்த அரிசியை சாலையில் கொட்டி எழுதிக் காண்பிப்பார் கதாநாயகன். ஒரு பருக்கைச் சோற்றின் அருமை தெரிந்த எவனாலும், அந்த காட்சியை ரசிக்க முடியாது. இப்படி பிரம்மாண்டம், வித்தியாசம் என்ற முறையில் ஷங்கர் செய்த சாதனைகள் ஏராளம்...

'அமித்ஷா' ஆஜராக வேண்டும்! - சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நக்கீரன் செய்திப்பிரிவு : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியும் அரசியலில் ஈடுபட்டுள்ளார். அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில், மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னை அவதூறாகப் பேசியதாக அபிஷேக் பானர்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்து, அமித்ஷாவுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மேற்கு வங்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் ராமர் ரத யாத்திரை நடத்த அனுமதி!

nakkeeran : மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "ராமருக்கு அயோத்தியில் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் உள்ள 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதிக்கக் கோரி உதவி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தோம். 

 கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அதனைக் கருத்தில் கொண்டும், சட்ட ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இன்று (19/02/2021) இரவு 08.00 மணி முதல் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு ரத யாத்திரை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, மதுரையில் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். 

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
dailythanthi.com :முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.கடையநல்லூரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- மத்திய அரசு, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 25.03.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் - 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் - 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

தமிழ்நாட்டில் நட்டநடுநிலை, நடு சென்டர்களின் அட்டகாசம்!!!

Kandasamy Mariyappan : · தமிழ்நாட்டில் நட்ட நடுநிலைகள், நடு சென்டர்களுடன் விவாதித்தால்...
திமுக, குடிசை மாற்று வாரியம் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை; கமிஷன் பார்ப்பதற்கு!!!
திமுக, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஓட்டு வீடு கட்டிக் கொடுத்தது, நட்ட நடுநிலை: கமிஷன் அடிப்பதற்கு!!! திமுக, நில உச்சவரம்பு மூலமாக குத்தகைதாரர்களுக்கே நிலங்களை பட்டா போட்டு கொடுத்தது,
நட்ட நடுநிலை: சொந்த கட்சிக்காரங்களுக்கு எங்கள் நிலத்தை எடுத்து கொடுத்து விட்டார்கள்!!!
திமுக தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நத்தம் புறம்போக்கு இடத்தில் வாழ்ந்த குடியானவர்கள்களுக்கும் அதே இடத்திற்கு வீட்டுமனை பட்டா கொடுத்தது,
நட்ட நடுநிலை: பொறம்போக்கு இடத்தை கட்சிக்காரங்களுக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டார்கள்!!!
திமுக, பேருந்துகள் அரசுடைமையாக்கி எல்லா கிராமங்களுக்கும் பேருந்து பேருந்து போக வழி செய்தனர்,
நட்ட நடுநிலை: பார்ப்பனர் மீது கொண்ட பொறாமையால் அவர்களிடம் இருந்த பேருந்துகளை பறித்துக் கொண்டார் கலைஞர்!!!
திமுக பத்துக்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களை உருவாக்கியது,
நட்ட நடுநிலை: குழாய் புதைக்க, மோட்டார் அமைக்க காண்ட்ராக்ட் விட்டு நல்ல சம்பாதித்தது!!!

தமிழக இட ஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டுகிறாரா பாமக ராமதாஸ்?

May be an image of 1 person
Parthi Ravichandran : · அது 1998ம் ஆண்டு ; அன்று விடியம்போது சிதம்பரம் நகரம் அதுவரை சந்தித்திடாத கலவரத்தை சந்திக்கும் என்றோ; தமிழ்நாடு அரசியல் அன்றிலிருந்து சாதியில் சிக்கி சீரழியும் என்றோ தில்லை நடராஜனுக்கோ, தில்லைவாழ் மக்களுக்கோ தெரிந்திருக்காது. சிதம்பரம் பாமகவின் நகர பிரமுகர் பழனிவேல் என்பவர் தில்லை கிழக்கு வாசலில் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த படுகொலையை செய்ததாக அறியப்படுபவர்கள் பிரேம்குமார் வாண்டையாரும்; அவருடைய தம்பி ஶ்ரீதர் வாண்டையாரும்.
சிதம்பரம் நகரத்தில் மாரியப்பா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என தொழிலில் கோலோச்சிய வாண்டையார் குடும்பம்.
எளிதாக சொல்வதென்றால் பசும்பொன் படத்தில் ‘தென்னாட்டு சிங்கமே’ பாடலில் சிவாஜிக்கு மாலை போடுபவர் தான் இந்த பிரேம்குமார் வாண்டையார்.
சினிமா பாணியில் ரவுடியிசம் கட்டபஞ்சாயத்து, மாமுல், பெட்டிக்கடைகளில் கூட இவர்களது படம் இருக்க வேண்டுமென உத்தரவிடுகிறார்கள் என்பது பாமகவின் குற்றச்சாட்டு.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தெலுங்கானா வக்கீல் தம்பதி படுகொலை : சந்தேக வலையில் ஆளும் கட்சி பிரமுகர் TRS தலைவரான குந்தா சீனிவாஸ்

  tamil.indianexpress.com : தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த வக்கீல் தம்பதி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்த தம்பதி ஜி. வாமன் ராவ் (52) மற்றும் ஜி நாகமணி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (புதன்கிழமை) பெடப்பள்ளி மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென காரை வழிமறித்த மர்மநபர்கள் தம்பதி இருவரையும் கத்தி மற்றும் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது கணவர், வாமன் ராவ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார். ஆனால் 108 ஆம்புன்சில் அவரை சிகிச்சைக்காக மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்நதார். இந்த படுகொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிடிவி தினகரன் விடுத்த திடீர் அழைப்பு.. மௌனம் கலைப்பாரா ஒபிஎஸ்! செம்ம பரபரப்பு

tamil.oneindia.com -Velmurugan P : சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் பரதன் ஆகலாம் வாருங்கள் என டிடிவி தினகரன் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்பாரா அல்லது மௌனம் கலைத்து டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளார். கூட்டுறவு கடன் ரத்து, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் ரத்து, ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து என பல்வறு அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு

சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து- முதலமைச்சர் அறிவிப்பு
maalaimalar :தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

 * கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
* குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
* சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.
* கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.
* காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

PetrolPriceHike பெட்ரோல்விலை ! எதிர்கட்சிகள் எப்போது மக்களுக்காக வாய் திறப்பார்கள்? எப்போது போராடுவார்கள்?

Karthikeyan Fastura  : சண்டை பழகலாம் வாங்க என்று Startup Business வகுப்பு எடுக்கும்போது ஒரு பொருளின்/சேவையின் விலை நிர்ணயிப்பது பற்றி நான் இவ்வாறு கூறுவேன்.
உங்களின் பொருளின்/சேவையின் விலை என்பது கைக்கு எட்டும் உயரத்தில் வாடிக்கையாளர் கண்ணின் உயரத்திற்கு இருக்கவேண்டும்.
தரையில் கிடக்கவும் வேண்டியதில்லை. கைக்கு எட்டாத உயரத்திலும் இருக்க கூடாது.
கையை எட்டி பிடிக்கும்படி இருந்தாலோ, தாவி பிடிக்கும்படி இருந்தாலோ என்னதான் சிறப்பான பொருளாக இருந்தாலும் தேவையான பொருளாக இருந்தாலும் சரியான விலையாக இருக்க முடியாது என்பேன்
பெட்ரோல் விலை இன்று 92 ரூபாய்க்கு வந்திருக்கிறது. கேஸ் சிலிண்டரின் விலையில் மானியத்தையும் ரத்து செய்தும் ரூபாய் 785க்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது உண்மையிலேயே சரியான விலைதானா என்றால் நிச்சயம் இல்லை. பொருளாதார சுமையை அவரவர் பொருளாதார வளத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்காமல் பொதுமக்களின் தலையில் மட்டுமே சுமத்தியுள்ளது அரசு. கோவிட் பிரச்சனையால் மக்கள் அவதியுறும்போது பெருநிறுவனங்கள் அதன் முதலாளிகள் நல்ல லாபம் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தேவையான முதலீடு தங்குதடையில்லாமல் வருகிறது. 

இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!

இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!
minnambalam.com : இந்தியாவில் முதன்முறையாக தூக்கிலிடப்படும் பெண்!" : தந்திரம் பெற்றபின் முதன்முறையாக இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது.  உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பள்ளியின் ஆசிரியராக இருந்த சவுகத் அலியின் மகள் ஷப்னம். பட்டதாரியான ஷப்னம், படிக்காத கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.   இவர்கள் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது.அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்று குவித்துவிட்டுச் சென்றதாக ஷப்னம் போலீஸாரிடம் கூறினார். ஆனால் போலீஸாரின் விசாரணையில், இந்தக் கொலையில், ஷப்னம் மற்றும் அவரின் காதலன் சலீமும் ஈடுபட்டது தெரியவந்தது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இதுதான்..! வெளியான உத்தேச பட்டியல்

தேமுதிக போட்டியிடும் உத்தேச தொகுதிகள் - 14 விருகம்பாக்கம் எழும்பூர் கொளத்தூர் ராணிப்பேட்டை விருத்தாச்சலம் ரிஷிவந்தியம் திருவெறும்பூர் கடையநல்லூர் கள்ளக்குறிச்சி (தனி) திருப்பரங்குன்றம் வால்குடி ஆத்தூர் (திண்டுக்கல்) தாராபுரம் (தனி) திருச்சுழி

Divakar M - Samayam Tamil : 2021 சட்ட சபை தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்ற உத்தேச தொகுதி பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 16 ஆவது சட்ட சபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. வருகின்ற மே மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடித்து ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்க பட வேண்டும். அதற்காக தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பொறுத்தவராவை முதல்வர் வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி '' வெற்றிநடை போடும் தமிழகம்'' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதே சமயம் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் காரசார பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக இரு வலுவான கட்சிகளை பொறுத்தவரை பேச்சுவார்த்தைகள் சுமூகமாக இருக்கிறதா என்பதே மர்மமாக உள்ளது. கடந்த 2011 சட்ட சபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் Live Perseverance rover landed on Mars and sent back its first images

dailythanthi.com வாஷிங்டன், செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி நாசா விஞ்ஞானிகள், இந்த விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நேற்று நெருங்கியதால் விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதையடுத்து ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பிய தகவலின்படி, அது தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.