செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

ஒன்றியத்தை ஒரு நாடாக்கக் கோரும் முற்றுருரிமை!

சிறப்புக் கட்டுரை: ஒன்றியத்தை ஒரு நாடாக்கக் கோரும் முற்றுருரிமை!

minnambalam : பாஸ்கர் செல்வராஜ் பாகம் 9    :   கொரோனா முடக்கம் ஏற்கனவே இந்தியச் சில்லறை சந்தையில் இருந்த வியாபாரிகளைப் பெருமளவு வியாபாரம் செய்ய விடாமல் தற்காலிகமாக முடக்கியது. இந்த காலத்தில் அவர்களின் இடத்தை இணைய வர்த்தகத்தின் வழியில் பிடித்த பெருநிறுவனங்கள் இப்போது அதிரடியாக அந்த இடத்தை விரிவுபடுத்தி வியாபாரிகளை நிரந்தரமாக வெளியேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் இடத்தை அமேசான், வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட், ஜியோ – கூகுள் - முகநூல் ஆகிய மூன்று பெருநிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு கைப்பற்றி வருகின்றன. 1.2-1.4 கோடி கடைகள் செயல்பட்டு வரும் இந்தச் சந்தையை இந்த மூவரும் கட்டுப்படுத்தும் வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சில நிறுவனங்களிடம் சந்தை ஒருமுகப்படும்போது இந்த சந்தை உள்ள நிலப்பரப்புக்குள் பொருட்களை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் எந்த தடையுமற்ற கட்டமைப்பைக் கோருகிறது. நடைமுறையில் இருக்கும் எல்லா தடைகளையும் நீக்க சொல்கிறது.

அழிவின் விழிம்பில் உள்ள பனை வளம்

May be an image of palm trees and nature
Jaffna Fashion : · அழிவின் விளிம்பில் பனை மரங்கள். உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.
பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

இலங்கை, நேபாளத்திலும் கிளைகள்.... சர்வதேச கட்சியாகிறதாம் பாஜக.... அமித்ஷா கூறியதாக திரிபுரா முதல்வர்

     theekkathir.in : அகர்தலா: பாஜக-வை இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம் மற்றும் இலங்கையிலும் விரிவுபடுத்த அமித் ஷா திட்டமிட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்லப் தேவ் குமார் என்றாலே எதையாவது உளறிக்கொட்டக் கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.“மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தன; சிவில் என்ஜீனியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுத வேண்டும்; குளத்தில் வாத்துக்கள் நீந்துவதால், தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்; டயானா ஹெய்டனுக்கு உலக அழகிப் பட்டம் கொடுத்திருக்கக் கூடாது” என்று எப்போதுமே ‘அறிவுப்பூர்வமாக’ பேசுபவர் பிப்லப் தேவ் குமார்.

யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் தியாகப் பணி புரிந்த மாதரசி மங்களம்மாள்! (1884 – 1971)

May be an image of 1 person
Maniam Shanmugam : · யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் தியாகப் பணி புரிந்த மாதரசி மங்களம்மாள்! யாழ்ப்பாணத்தில் பிறந்த பெண்ணொருவர் காந்தியவாதியாகவும், பெண் விடுதiவாதியாகவும், இதழியலாளராகவும், இந்தியாவில் அரசியல்வாதியாகவும் வாழ்ந்த வரலாறு நமது இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் அப்படியொருவர் வாழ்ந்திருக்கிறார். அவரது பெயர் மங்களம்மாள் மாசிலாமணி (1884 – 1971) யாழ்ப்பாணத்திலுள்ள ஓட்டுமடம் பகுதிக்கு நான் செல்லும் போதெல்லாம் ‘பீ.ஏ.தம்பி ஒழுங்கை’ என்ற வீதியால் செல்வதுண்டு. அப்பொழுதெல்லாம் அந்த வீதிக்கு அந்தப் பெயர் வந்த காரணத்தை அறிந்திருக்கவில்லை. ஆனால் மங்களம்மாளின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த பின்னர்தான் அதை அறிந்து கொண்டேன்.
அந்த வீதியின் பெயருக்கு உரியவரின் பெயர் கதிரவேலுப்பிள்ளை. அவர் மங்களாம்மாளின் தாய்வழிப் பாட்டனார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஒரு வழக்கறிஞர் என்பதுடன், அந்தக் காலத்தில் மிகச் சிலரே அரிதாகப் பெற்றிருந்த பீ.ஏ. பட்டத்தையும் பெற்றிருந்தார். அதன் காரணமாக, மக்கள் அவரை “பீ.ஏ. தம்பி” என அழைத்தனர். அதன் காரணமாகவே அந்தப் பெயர் அவர் வாழ்ந்த வீதிக்குப் பின்னர் சூட்டப்பட்டது.

திங்கள், 15 பிப்ரவரி, 2021

முதலில் பெண் இனம் தான் தோன்றியது.. உலக மதங்களின் மீதும் தாக்குதல் தொடுத்த பரிணாம வளர்ச்சி!

May be an image of 3 people

Sivakumar Shivas : · ஒட்டுமொத்த உலக மதங்களின் மீதும் தாக்குதல் தொடுத்த பரிணாம வளர்ச்சி விளக்கப் படம்! ஆண் பெண் பால் வித்தியாசமில்லாத உயிரினங்களில் இருந்து முதல் உருவாகிய பால் இனம் பெண்! பின்பு தான் ஆண் என்ற வேலைக்காரா காவல்காரா இனம்! வாழ்க நீ எம்மான் டார்வின்!.. 

 Ahmed Muhammed : கற்பனை ஓவியங்கள் ஆதாரங்களாகாது..டார்வினிசம் இன்னும் ஃபிக்ஷன் தானே தவிர ப்ரூவ்ட் கிடையாது... டார்வின் கொள்கையும் நம்பிக்கை தான் அறிவியல் கிடையாது சகோதரரே...

 Sivakumar Shivas : Ahmed Muhammed நம்ப முகமது கழுதை மேலே ஏறி ஏழு வானம் கடந்து போயி அல்லா சாமியை பார்த்துட்டு திரும்பி வந்தது? Fiction ஆ? Theory ஆ? Proven truth ஆ? .. 

Ahmed Muhammed : Sivakumar Shivas ஹாஹா நாங்க நம்பிக்கை னு தானே சொல்றோம்... 

பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

Malathi Maithri : மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
  1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
  2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
  3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
  4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?
  5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

Dr. ஷாலினி நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.

May be an image of 1 person
ஆலஞ்சியார் :· டாக்டர் ஷாலினி. மனநல மருத்துவர்.. மனித மனம் குறித்து அறிந்தளவிற்கு அரசியல் மற்றும் பொது சிந்தனை குறித்து அறிந்திருக்கவில்லை .. சமீபத்திய கருத்துகள் நிறைய விமர்சனங்களை தருகிறது .. எதிர்கருத்துகளை சொல்லவே கூடாதா என்றால் சொல்லலாம் கருத்தை எதிர்ப்பை பதிவு செய்வதற்கு முன் அதுகுறித்து முழுமையாக அறிந்திருக்கவேண்டும் . விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் வாயை திறக்கவில்லை என தயாநிதியை கேள்வி கேட்கிறார் .. எனது தொகுதி எனது பிரதிநிதி என் சார்பாக அவர்தானே கேட்கவேண்டும் என்கிறார்..
தன் எம்பியின் செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பது தவறில்லை ஆனால் கேள்வி கேட்கும் முன் அவர் பேசியிருக்கிறாரா என தெரிந்துக்கொண்டிருக்கலாம் .. எது குறித்தும் எவர் மீதும் விமர்சனம் செய்வதற்குமுன் குறைந்தபட்ச அதுகுறித்து அவர் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கேள்வி எழுப்பவேண்டும் ..
அவர் பேசினால் போதுமா மற்ற எம்பிகள் ஏன் பேசவில்லை என்கிறார் ..
நாடாளுமன்ற நடைமுறைகள் .. எந்தெந்த கட்சிக்கு எத்தனை மணிதுளிகள் தரப்படும் ..கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்ப்போல் நிமிடங்கள் ஒதுக்கபடும் .. திமுகவிற்கு ஒதுக்கபடும் நிமிடங்களுக்கு சில உறுப்பினர்கள் மட்டுமே பேசமுடியும் ..அதோடு பிற பிரச்சனைகள் குறித்தும், தங்கள் தொகுதிநலன் குறித்தும் மாநில நலன் இப்படி பல்வேறு விடயங்களை பேச வேண்டியிருக்கும் .. Dr. ஷாலினி
நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.

சசிகலாவை ஓரங்கட்டுவதில் வெற்றி பெறுகிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

Image result for சசிகலா எடப்பாடி பழனிசாமி

.Hemavandhana - tamil.oneindia.com :  சென்னை: பஞ்ச தந்திரங்களை கையில் எடுத்து, அதை நாசூக்காக வென்று முடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி...
சசிகலாவுக்கு எதிராக முதல்வர் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு அஸ்திரமும், தனக்கு சாதகமான சூழலையே களத்தில் உருவாக்கி வருகிறது..!
"சசிகலா வருவதற்கு முன்பிருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவித பயம் வந்துவிட்டது.. அதனால்தான் ஜெயலலிதா நினைவிடத்தை, அவரது வருகையன்று அவசர அவசரமாக திறந்தார்,
பிறகு சென்னைக்கு சசிகலா வருவதாக தெரிந்ததுமே சூட்டோடு சூட்டோக உடனே மூடிவிட்டார். தன்னுடைய வேலூர் பிரச்சாரத்தையும் அன்றைய தினம் ரத்து செய்துவிட்டார்..
சசிகலா என்ற பேரையே தன் பேச்சில் எடுக்காமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.. அமைச்சர்களை யாரும் சசிகலாபற்றி பேசக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார்.. அப்படியே யாராவது நடந்து கொண்டாலும் அவர்களை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்...
இளவரசி, திவாகரன் சொத்துக்களை முடக்குகிறார்.. பல வகைகளில் நெருக்கடி தந்து கொண்டே இருக்கிறார்" என்ற பரபரப்பு பேச்சுக்கள் முதல்வரை வட்டமடித்து கொண்டே இருக்கின்றன

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்: துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

ops-speech
hindutamil.in : பிரதமர் மோடி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று சென்னையில் நடந்த அரசு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டினார். சென்னையில் நேற்று நடைபெற்ற மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கம் உட்பட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இவ்விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசும்போது கூறியதாவது: மத்திய - மாநில அரசுகளின் கூட்டுமுயற்சிக்கும் இணக்கத்துக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நல்லதொரு உதாரணம். மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பல வளர்ச்சிகளை காண முடியும் என்பதற்கு இங்கு தொடங்கி வைக்கப்படும் பல்வேறு திட்டங்களே எடுத்துக்காட்டு. இந்த ஆக்கப்பூர்வமான கூட்டுசெயல்பாடு தமிழகத்தை இன்னும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று நள்ளிரவு முதல் கட்டாயம்
dailalythanthi :புதுடெல்லி,சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது.எனவே, இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் ‘பாஸ்டேக்’ முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம்.

‘பாஸ்டேக்’ முறைக்கு வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

வேளாண் சட்டத்தை எதிர்த்த இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது!

வேளாண் சட்டத்தை எதிர்த்த இளம் செயற்பாட்டாளர் திஷா ரவி கைது!

Minnambalam : மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து பகிர்ந்த ட்வீட் தொடர்பாக பெங்களூருவுவைச் சேர்ந்த காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 21வயதான திஷா ரவி என்கிற சமூக செயற்பாட்டாளரை டெல்லி போலீசார் இன்று (பிப்,14) கைது செய்துள்ளனர்.   திஷா ரவி தனி நபர் இல்லை. "உங்கள் தலைமுறை வயது மூப்பால் இறந்து போவீர்கள். ஆனால், எங்கள் தலைமுறை காலநிலை மாற்றத்தால் கொண்டுவரும் பேரழிவுகளால் இறந்து போவோம்" என எழுந்து நின்று ஒவ்வொரு இளைஞருக்காவும் குரல் உயர்த்தியவர்.  கடல், மண், காற்று, ஆறு என எல்லாவற்றையும் மாசாக்கும் பெருமுதலாளிகள் இவற்றையெல்லாம் பாதுகாத்து அடுத்த தலைமுறை பிள்ளைகள் பயன்படுத்த குரல் கொடுத்த திஷா ரவியை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கமல் உள்ளே வருவாரா; காங்கிரஸ் வெளியே போகுமா? திமுகவுக்குள் நடக்கும் திரைமறைவு பேச்சுவார்த்தை!

minnambalam : மக்கள் நீதி மய்யம் பொதுக்குழுவில் கமல் பேசியதாக எந்தக் காணொளியும் வெளியில் வரவில்லை; ஆனால் உள்ளே அவர் பேசியதாக, சிலர் கூறியதாக பல தகவல்கள் வெளியாகின.
அதில் முக்கியமானது, அவர் திமுகவை கடுமையாக விமர்சித்தார் என்பதுதான்.
பொதுக்குழு கூடுவதற்கு முன்பாக, திமுகவை அவர் இவ்வளவு காட்டமாக விமர்சித்ததில்லை என்பதால் அவர் இந்தத் தேர்தலிலும் தனித்தே களம் காண்பார் என்பதாகத்தான் அவருடைய அபிமானிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளே கமல் அப்படிப் பேசினாலும் தேர்தல் நெருங்கும் போது அவர் என்ன செய்வார் என்பது குறித்து யாராலும் யூகிக்க இயலவில்லை.
அதேநேரத்தில் இந்தத் தேர்தலில் கமல் என்ன செய்ய வேண்டுமென்று தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் நினைக்கின்றன என்பது பற்றி பல்வேறு தகவல்களும் செவிகளில் வந்து விழுகின்றன.
திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது, இழுபறியாகிக் கொண்டிருக்கிறது, அவர் அதைச் சொன்னார், இவர் இதைச் சொன்னார் என்று தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றித்தான் ஊடகங்களில் பலவிதமான யூகங்கள் உலா வருகின்றன.

பண்பாட்டுப் படையெடுப்பின் பக்கவிளைவே நரபலிகள்

May be an image of text that says 'பண்பாட்டுப் படையெடுப்பின் பக்க விளைவே நரபலிகள்! urtime. மஞ்சை வசந்தன்'
May be an image of 2 people
May be a black-and-white image of 2 people and text that says 'அலேக்யா சாய் திவ்யா'
Manjai Vasanthan : · பண்பாட்டுப் படையெடுப்பின் பக்கவிளைவே நரபலிகள். நரபலி என்பதே பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாய் நிகழ்த்தப்படும் படுகொலை. உலகில் தமிழர்களுக்கென்று ஓர் உயர்ந்த பண்பாடு உண்டு. தமிழினம் தொல்லினம் என்பதால் அவர்கள் பகுத்தறிவின்பாற்பட்ட, இயற்கையோடு இயைந்த மனிதநேயமுடைய சமத்துவ வாழ்வை வாழ்ந்தவர்கள். தன்னை ஒத்த மனிதர்களை மட்டுமின்றி மற்ற உயிர்களையும் நேசித்த உயிர் நேயர்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். புறாவைக் காப்பாற்ற தன் தொடையை அறுத்துக் கொடுத்தான் சிபி மன்னன். முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. பகுத்தறிவுக்கு இவை ஏற்புடைய செயல்கள் அல்லவென்றாலும் அவர்களின் உயிர்நேயம் இங்கு உய்த்து உணரத்தக்கது. தமிழர்க்கு கடவுள் நம்பிக்கையில்லை. அவர்களிடையே நன்றியின்பாற்பட்ட வழிபாடு மட்டுமே உண்டு. தனக்குப் பயன்படுபவற்றை மதித்து வணங்கினான். அப்படி வணங்கும்போதுகூட பலியிடும் வழக்கம் தமிழர்க்கு இல்லை.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

தமிழ்நாட்டை கொள்ளை அடிக்க ஜாக்கி வாசுதேவ் கன்னக்கோல் காவுகிறான் மக்களே விழித்து கொள்ளுங்கள்

ஜாக்கி தன் மனைவியை கொலை செய்தவர் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது
https://scontent-yyz1-1.xx.fbcdn.net/v/t1.0-0/p526x296/150371846_1871402219702181_456361879803592067_o.jpg?_nc_cat=109&ccb=3&_nc_sid=730e14&_nc_ohc=SdKWAQ45qS0AX8VzGzO&_nc_ht=scontent-yyz1-1.xx&tp=6&oh=f18461e3c525b6c059983c32b1b5c44c&oe=604DD71D

 

Nata Rajan  :  கன்னக்கோலும் ஜக்கி வாசுதேவ் என்ற திருட்டு பரதேசியும்!
அந்தக் காலத்தில், மிகவும் இருட்டாக உள்ள இரவு நேரத்தில் கொள்ளையர்கள் திருடச் செல்வார்கள். அப்போது,
தாங்கள் எந்த வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தார்களோ, அவ்வீட்டின் சுவற்றில் ஓட்டையிட்டு அதன் வழியாக உள்ளே நுழைந்துசென்று கொள்ளையடிப்பார்கள்.
அவ்வாறு திருடர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க வீடுகளில் உள்ளோர் எச்சரிக்கையாக விழித்திருப்பர். இந்தச் சூழலில் எவ்வாறு வெற்றிகரமாகக் கொள்ளையடிப்பது?
அதற்காக, கொள்ளையர்கள் ஒரு தந்திரத்தைக் கையாள்வார்கள். ஒரு வீட்டின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டபின், ஒரு கருப்பான பழைய சட்டி அல்லது சிறிய பானையை, ஒரு நீளமான கோலில் மாட்டி மெதுவாக அந்த ஓட்டை வழியே, நுழைப்பர். கன்னங்கரிய அந்த இருட்டில்,

May be an image of one or more people and text

வீட்டின் உள்ளே இருப்போர், திருடன்தான் தனது தலையை நுழைக்கிறான் என்று எண்ணி, தமது கையில் உள்ள கழியால் ஒரே அடியாக வேகமாக அடிப்பர். அவ்வாறு அடித்த அடியில் திருடர்களால் நுழைக்கப்பட்ட பானை சுக்குநூறாக உடையும்.

கஜினி முகம்மதுவுக்கு சோம்நாத் கோயிலும் உண்மையில் என்னதான் நடந்தது? தயானந்த சரஸ்வதியின் "சத்தியர்த்தப் பிரகாரம் நூலிலிருந்து

May be an illustration of 1 person, beard and text
கஜினி முகம்மது
May be an image of temple and outdoors
சோம்நாத் கோவில்
Sundar P : கஜினி முகம்மதும் சோம்நாத் கோவிலும்: கஜினி முகம்மது சுமார் 20,000போர் வீரர்களுடன் சோமநாத் கோவிலக் கொள்ளையடிக்க வந்து கொண்டிருந்த சமயம்..... ஒற்றர்கள் முலம் உண்மையை அறிந்த குஜராத் அரசர்கள் தங்களுடைய குருவான சோமநாதபுர தலைமை அர்ச்சக‌னிடம் '"எங்களிடம் நாலரை லட்சம் சைன்னியங்கள் இருப்பதால், அவனை வழியிலேயே சென்று அடித்துத் துரத்திவிடலாம் சுவாமி! உத்தரவு கொடுங்கள்"என்று விண்ணப்பித்தனர். அதற்கு அந்த குருவோ, "நீங்கள் சொல்லுவதற்கு முன்னரே கணேசனும், காளியும், பைரவரும் என் கனவில தோன்றி,"மிலேச்சன் வருகிறான்;அவனால் அரசர்களுக்கு யாதும் கேடு விளையாமல் காப்பாற்றுவோம். ஆனால் அதற்கு விசேஷமான ஹோமங்களும், பிராமணர்களுக்கு அன்னதானம், கன்னிகாதானம் முதலியவை நடைபெற வேண்டும்," என்று சொல்லி மறைந்தார்கள் ஆதலால், யுத்தத்திற்குப்‌போக வேண்டாம். புராணங்களிலும், பிராமண வாக்கிலும்
உங்களுக்கு வரவர நம்பிக்கை குறைந்து வருவதால், இவ்வித இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே யுத்தத்திற்கு செலவழியும் பொருளை
பிராமணர்களுக்கும் தானம் கொடுத்து விடுங்கள்"என்று கூறினார்...

அதிமுகவுக்கு இரு மத்திய அமைச்சர் பதவிகள் உறுதி? ரவீந்திரநாத் மற்றும் தம்பித்துரை அல்லது நவநீதகிருஷ்ணன் (காஷ்மீர் பியூட்டிபுள்)

Vishnupriya R - tamil.oneindia.com  :  சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அவர்களில் ஒருவருக்கான பதவி உறுதியாகிவிட்டது. இன்னொருவருக்கான பதவி குறித்து பிரதமரிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த ஒருவர் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் ஆவார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த போதே கல்வெட்டில் இவரது பெயர் பதிப்பு என கிட்டதட்ட வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதை வைத்து தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுகுறித்து டெல்லி சென்று பேச்சுவார்த்தையும் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பலன் கிடைக்கவில்லை

ஐக்கிய ஜனதா தளம் இந்த நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் அதில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. பொதுவாக 80 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம். ஆனால் தற்போதோ 53 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.

இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? இலங்கை மந்திரி விளக்கம்

dailythanthi.com : கொழும்பு, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி சரக்கு முனையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக இந்தியா-ஜப்பான்-இலங்கை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் முந்தைய சிறிசேனா ஆட்சியில் (2019-ம் ஆண்டு) கையெழுத்திடப்பட்டது. ஆனால் இது தொடர்பாக துறைமுக ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். நிலையில் மேற்படி ஒப்பந்த பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில், துறைமுகத்துறை மந்திரி ரோகிதா அபேகுணவர்தனா பதிலளித்து பேசினார். அப்போது அவர் இந்த பணிகளை எடுத்துக்கொண்டிருந்த இந்திய நிறுவனம், தங்கள் புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

maalaimalar : ரூ.3770 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். வண்ணாரப்பேட்டை-விம்கோநகர் மெட்ரோ ரெயில் சேவை திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
விம்கோ நகரில் இருந்து முதன் முதலாக புறப்பட்ட மெட்ரோ ரெயில்< சென்னை: சென்னையில் வண்ணாரப்பேட்டை- விம்கோநகர் இடையே ரூ.3770 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவாக்கம் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மேலும் 2 ரெயில் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.4,486 கோடி செலவில் 3 ரெயில் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் சீரமைப்பு திட்டம் மற்றும் ரூ. ஆயிரம் கோடி செலவில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பம் சார்பில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நில அதிர்வு.. அறை குலுங்கினாலும் அசராமல் நேரலையில் பேசிய ராகுல் காந்தி

 

 Anbarasan Gnanamani -tamil.oneindia.com டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடிய போது நில அதிர்வு ஏற்பட்டது. தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று (பிப்.12) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவுகோலில் 5.9-ஆக இது பதிவானது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது. v>அதுமட்டுமின்றி, டெல்லி, டெல்லி என்சிஆர், வடமாநிலங்களிலும் சில வினாடிகளுக்கு இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பதறிய மக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். 

ஆனால், இதுவரை வடமாநிலங்களில் நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தகவல் ஏதும் பதிவாகவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அறை முழுவதும் குலுங்கியது. கொஞ்சமும் பதட்டப்படாத ராகுல், 'இங்கே நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்' என கேஷுவலாக சொல்லிவிட்டு மீண்டும் தனது உரையாடலைத் தொடங்கினார்

2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்.. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

BBC    :  2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைப்பதற்கு கொங்கு மண்டலமே பிரதான காரணமாக இருந்தது. ஆனால், தற்போதைய களநிலவரம் கலவர நிலவரமாகவே இருப்பதாக அதிமுகவினரே ஆடிப்போயிருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு பரப்புரையிலும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் மக்களின் குறைகளைத் தீர்ப்போம்' என ஸ்டாலின் தெரிவித்தார். அதற்கேற்ப, தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறார்.

100 முதல் 1100 வரை!

தி.மு.க தலைவரின் இந்த முயற்சிக்குத் திருப்பூர் பிரசாரத்தில் பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி பெட்டிக்குள் போட்டுவிட்டு 100 நாட்களில் இவர் தீர்ப்பாராம். எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஏன் மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை? ஆட்சியில் இருந்தபோது இதனைச் செய்யாமல் தற்போது ஏமாற்றி வருகிறார்' என கொதித்தார்.

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை- 10,000 போலீசார் பாதுகாப்பு

.dailythanthi.com :சென்னை, பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை வருகிறார். அவர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் அவர், சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது ரெயில் பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள ‘டிஸ்கவரி கேம்பஸ்’ வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஜப்பானில் ஃபுகுஷிமாவிற்கு அருகில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்

             BBC : ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது பெரிதாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை. நிலநடுக்கத்தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜப்பானின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து நாட்டின் தென்மேற்கு பகுதி வரை உணரப்பட்டுள்ளது.

ஜப்பான் அரசு தொலைக்காட்சியான எஹெச்கே டிவி, ஃபுகுஷிமா அணுஉலை ஏதும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா என சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன

மஞ்சள்காமாலை நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் எளிதில் சரிபடுத்தக்கூடிய......

Suresh Kumar Sundaram :மஞ்சள் காமாலைக்கு நாட்டுமருந்து கொடுத்துவிட்டு மரணம் நடந்தால், நாட்டு வைத்தியர்கள் பழிபோடுவது நாட்டு மருந்து சாப்பிட்டுவிட்டு பத்தியம் பார்க்காமல் மது குடித்தார் அல்லது மழையில் நனைந்தார் , ஆற்றில் குளித்தார் அதனால் தான் நடந்தது என்று தப்பித்து கொள்வார்கள்...

 Mariano Anto Bruno அறிவியல் அடிப்படையில் எழுதிய பின் வரும் கட்டுரை சிலவருடங்களுக்கு முன்பு படித்தது இன்று மீண்டும் கண்ணில் சிக்கியது...

கண்டிப்பாக படியுங்கள் மற்றவர்களைக்கு விளக்கமாக சொல்லி புரிய வையுங்கள்...
மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்... 
உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)
இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.
1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை
2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை

Trump acquitted வன்முறையை தூண்டும் பேச்சு; கண்டன தீர்மான வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிப்பு ..Trump acquitted by U.S. senate in 2nd impeachment trial

thinathanthi :வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளர் பைடன் பெற்ற வெற்றியை தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டியிருந்தது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறி வந்த டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் வன்முறை ஏற்பட்டது.  போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன.  வன்முறையை தூண்டி விடும் வகையில் டிரம்ப் பேசினார் என கண்டனம் எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்க செனட் சபையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.  இதில், கடந்த ஜனவரி 6ந்தேதி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய டிரம்புக்கு எதிராக செனட் சபையை சேர்ந்த குடியரசு கட்சியினர் 7 பேர் வாக்களித்தனர்.

திருவல்லிகேணியில் குஷ்பு நிற்கிறாரா?

Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நடிகை குஷ்பு உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி, குஷ்புவுக்கு ஓட்டுப் போட தயாரா? என்று கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் திருவல்லிக்கேணியில் குஷ்பு போட்டியா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் தனியாகவும் போட்டியிடுகின்றனர். அதிமுக அணியில் உள்ள பாஜக முன் எப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் தீவிரமாக வேலை செய்து வருகிறது.