மின்னம்பலம்: முதல்வரின்
ஆடம்பரத்துக்குப் போக்குவரத்துக் கழகங்கள் இழப்பைச் சந்திக்க வேண்டுமா
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவை தொடக்கவிழா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று (ஜூலை 3) நடைபெறுகிறது. இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்குக் கண்டிப்பாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது.
இந்த ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண் ஜெயலலிதாவாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்க விழா தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.


























