திங்கள், 21 மே, 2018

குஜராத்தில் தலித் அடித்துக் கொலை!

குஜராத்தில் தலித் அடித்துக் கொலை!மின்னம்பலம்: குஜராத் ராஜ்கோட்டில், தொழிற் சாலை ஒன்றின் ஊழியர்களால் முகேஷ் வானியா என்ற தலித் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி இன்று காலை வெளியிட்ட காணொளியில், தொழிற்சாலை நுழைவாயில் ஒன்றில், இடுப்பில் கயிற்றினால் கட்டப்பட்டிருந்த தலித் ஒருவரை, 3 பேர் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் சம்பவ காட்சியை பதிவேற்றியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலையில், முகேஷ்வானியாவையும் அவரது மனைவியும் தாக்கிய கும்பல், அவர்கள் காந்தங்களைப் பயன்படுத்தி இரும்பு பொருட்களை திருடியதாகக் குற்றம்சாட்டி, அவர்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி நினைவு தினம் - வீர் பூமியில் சோனியா மற்றும் ராகுல் அஞ்சலி


விகடன் - சத்யா கோபாலன்: இன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல்மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் ராஜீவ் காந்தி. இவரின் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையைப் பெற்றுத் தர முயன்றார். 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டுமூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

நடிகை கஸ்தூரியின் விழுந்தோம்... மன்னியோம் ... ரசாபாசமாகி ....

A P S ASHOKKUMAR"@KasthuriShankar
தி தி சொம்பு என்று வார்த்தையை முதலில் நீங்கள் தான் பதிவிட்டீர்கள் அதில் அவர் எல்லை மீறியிருக்கிறார் தவறு தான் . நீங்கள் திமுகவை சாட வேண்டும் என்றால் தைரியமாக திமுக என்றே குறிப்பிடலாம் . அதை விட்டு திராவிட என்ற ஒரு இனத்தை கொச்சை படுத்துவது நியாயமா தோழி
வெப்துனியா :நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது.
பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
;நடிகர் கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல கருத்துகளை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில், இலங்கை படுகொலையை நினைவு படுத்தும் விதமாக, மே 18ம் தேதி தனது முகநுல் பக்கத்தில் “விழுந்தோம் இழந்தோம் எழுவோம் எனத் தொடங்கும் ஒரு கவிதையை பதிவு செய்திருந்தார். அதை தனது டிவிட்டர் பக்கத்திலும் டேக் செய்திருந்தார்.
இதில் திமுக குறித்து இவர் எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஆனாலும், இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொலை செய்யப்பட காரணமாக திமுக-காங்கிரஸ் கட்சிகள் இருக்கிறது என அந்த கவிதையில் கூறப்பட்டதாக கருதிய திமுக விசுவாசி ஒருவர் கஸ்தூரியை தரக்குறைவாக விமர்சித்தார்.
அதைக்கண்ட கஸ்தூரி, கழக கண்மணி, தமிழகத்தின் தூண், தி தி சொ (திருட்டு திராவிட சொம்பு ?) என ஒரு பதிவை போட்டார். இதன் பின் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களுக்கும், அந்த திமுக விசுவாசிக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு களோபரமாகியது.

காங்.-மஜத கூட்டணி அரசில் சிக்கல் உள்ளது: டி.கே.சிவகுமார் பேட்டி

Lakshmi Priya - Oneindia Tamil : பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து அரசமைப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக காங்கிரஸ் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 
ஒருபக்கம் சிக்கல் இல்லை என குமாரசாமி கூறியிருந்த நிலையில், சிவகுமார் பேட்டி முக்கியத்துவம் பெறுகிறது. செய்திகள் அப்டேட்டுகளை உடனுக்குடன் இப்பகுதியில் தெரிந்து கொள்ளலாம் கர்நாடகா மாநிலத்தின் முதல்வராக நாளை மறுதினம் குமாரசாமி பதவியேற்கிறார். அதற்கடுத்த நாள் வியாழக்கிழமை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அதிக இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி தங்களுக்கு அதிக அளவில் அமைச்சர் பதவி வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜேடிஎஸ்ஸும் கோரி வருகின்றன. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு குமாரசாமி செல்கிறார். அங்கு சோனியா மற்றும் ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமைச்சரவை இறுதி செய்யப்படும் என தெரிகிறது. 
  மாயாவதியுடன் குமாரசாமி சந்திப்பு 
 கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ்-மஜத நடுவே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார், அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு 7 பேர் உயிரழப்பு .. செவிலியரும் உயிரழப்பு ..சிகிச்சையால் குணப்படுத்த முடியாது

Voice of South India : Current situation in Calicut Medical College due to the #Nipah virus. Six
people including a nurse who treated the patients were died due to Nipah infection.
BBC : இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிப்பா வைரசின் அறிகுறிகளால் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிப்பா வைரஸ் பரவப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுக்க சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கேரள முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடில் அதிகளவில் இந்த வைரஸ் பரவி வந்தாலும், மாநிலம் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை செயலாளர் ராஜீவ் சதானந்தன், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்ததாக கூறினார்.

திருமாவளவன் எச்சரிக்கை :ஐ ஏ எஸ் தேர்வுகளில் குலக்கல்வி முறை? ஃபவுண்டேசன் கோர்ஸ் என்பது அதுதான்

நக்கீரன் :ஐஏஎஸ் பணியமர்த்தும் முறையில்
மாற்றம் செய்யக்கூடாது என்று
மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: ‘’இந்திய குடிமைப்பணிகள் எனப்படும் ஐஏஎஸ்/ ஐபிஎஸ் பணிகளுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த தேர்வு முறையில் புதிய மாற்றம் ஒன்றை புகுத்துவதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
 ஃபவுண்டேசன் கோர்ஸ் எனப்படும் அந்த முறையால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் நல்ல வேலையைப் பெறுவது தடைபட்டுவிடும். எனவே, இந்த முயற்சியைக் கைவிடுமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
 தற்போது ஒருவர் யுபிஎஸ் சி முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டே அவருக்கு ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளில் பணியமர்த்தம் செய்யப்படுகிறது. அதன்பின்னர் பயிற்சி அளிக்கும் நோக்கோடு ஃபவுண்டேஷன் கோர்ஸ் உள்ளது. ஆனால், இனிமேல் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அதன் பிறகு ஃபவுண்டேசன் கோர்ஸை முடிக்க வேண்டும் என்றும், முதன்மைத்தேர்விலும் ஃபவுண்டேசன் கோர்ஸிலும் பெறுகிற மதிப்பெண்களைக் கூட்டி அதனடிப்படைலேயே பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்றும் மோடி அரசு முடிவெடுத்துள்ளது.

கடலூர் மீனவர்களின் மோதல் பின்னணி!

மின்னம்பலம்: கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் சோனங்குப்பம் மீனவர்களுக்கும் ஏற்பட்ட பயங்கரமான மோதலில் பஞ்சநாதன் என்ற மீனவர் வெட்டி சாய்க்கப்பட்டார் மற்றும் சிலர் வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மீனவர்களின் மோதல் பின்னணி!கடந்த 15ஆம் தேதி தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் சோனங்குப்பம் மீனவர்களுக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இச்சம்பவத்தில் கடலூர் முதுநகர் போலீஸாரும் கடலூர் புதுநகரைச் சேர்ந்த தேவனாம்பட்டினம் போலீஸாரும் மற்றும் சிறப்புப் படையினரும் சேர்ந்து வெவ்வேறு வழக்குகளில் இதுவரையில் 27 மீனவர்களைக் கைது செய்துள்ளனர். தேவனாம்பட்டினம் கிராமத்தில் கைதுக்குப் பயந்து கடந்த ஆறு நாள்களாக அனைவரும் தலைமறைவாக இருந்துவருகிறார்கள். இதனால் தேவனாம்பட்டினத்தில் ஆண்கள் இல்லாமல் இருப்பதால் ஊர் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!!


இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்!! இந்த நாட்டிலே சொந்த
நாட்டிலே நம்ம நாட்டிலே!!
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்!!
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்!! சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்!!
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்!!
பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே.. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்!!..
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே!!
படம்: மலைக்கள்ளன்
பாடல் வரிகள்: T.N.ராமையா

ஸ்டாலின் : ஐ ஏ எஸ் தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள் புகுத்த மத்திய அரசு முயற்சி




tamilthehindu :ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகளைப் புகுத்தும் முயற்சியை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்து பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராகவும், சமூக நீதிக் கொள்கைகளை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும், பின்னடைவுப் பாதையில் அநியாயமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூக நீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கத் துடித்துக் கொண்டிருப்பதற்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஐஏஎஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத் தேர்வை நடத்தியும் தேர்வு செய்து முடிவுகளை வெளியிட்டது.

ஞாயிறு, 20 மே, 2018

திருச்சி விமான நிலையத்தில் தம்பிகளின் பேராசை ....

ஆலஞ்சியார் :இனவாதமும் மதவாதமும் .. திருச்சி விமான நிலையத்தில் வைகோவிற்கெதிராக நாம் தமிழர் பாய்ஸ் கலாட்டா செய்ய மதிமுகவினர் தாக்க தொடங்கினர்.. சீமானின் தம்பிகள் தலைத்தெறிக்க ஓடதொடங்கினர் ..
இது திட்டமிட்ட செய்யபடுவது.. சீமானின் ஈழம் பல்லிளிக்க தொடங்கியதும் ...சீமான் இதுவரை சொல்லிவந்த பொய்களை திரு.வைகோ ஒவ்வொன்றாக வெளியிட்டு வைகோவை தெலுங்கர் வந்தேறி என கதைக்க தொடங்கும் போது அவர்களின் நோக்கம் நமக்கு புரிகிறது .. பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து வந்து ..திராவிட அரசியலில் உழன்று .. தமிழ் மீது தமிழர் மீது தீராத காதல் கொண்டவர் .. தன்னை தமிழனாகவே அடையாளம் காட்டிக்கொண்டவர் .. இன்றைக்கு ஈழத்தை வைத்து வியாபாரம் செய்து வயிற்றுப்பிழைப்பு நடத்துவோர் மத்தியில் .. நீண்டகாலமாக ஈழத்தின் .. ஈழவிடுதலையின் தமிழக முகமாகவே இருந்தவர்.. அதற்காக தான் வளர்ந்த சூழலை மறந்து தன்னை வளர்த்த திமுக ஆட்சிக்குவந்த சில நாட்களிலேயே .. அதற்கு மத்திய அரசின் அழுத்தம் வருமென தெரிந்திருந்தும் .. ஈழ பயணத்தை மேற்கொண்டவர் .. ஈழத்தலைவர் பிரபாகரனோடு தோளின் மீது கையை போட்டும் பேசும் அதிகாரம் கொண்டவர் .. ஈழ விடயமாக மற்றவர்களை விட அதிகம் அறிந்தவர்.. கடைசிக்கட்ட போரின் போது .. ப.சிதம்பரம் நேரடியாகவே ஈழத்தலைமை பிரபாகரனோடு பேசி போரை நிறுத்துங்கள் .. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு முடிவுக்கு வரலாமென்ற போது .. வைகோவிடம் கேட்டுவிட்டு பதலிளிக்கிறேன் என்றுதான் சொன்னாரே ..தவிர.. இந்த சில்லறைகளையெல்லாம் கணக்கிலேயே கொள்ளவில்லை.. அன்று வைகோ எடுத்த முடிவு தவறானது வேறுவிடயம்..

நீதிபதி செலமேஸ்வர் : பாராட்டு தேவையில்லை குரல் கொடுங்கள்

பாராட்டு தேவையில்லை குரல் கொடுங்கள் : நீதிபதி செலமேஸ்வர்மின்னம்பலம் :தன்னைப் பாராட்டும் நீதிபதிகளிடமெல்லாம், பிரச்னைகளுக்கு எதிராக நீங்களும் குரல் எழுப்ப வேண்டும் என்று தான் வேண்டியதாக நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டாம் நிலையில் உள்ள நீதிபதியான ஜஸ்தி செலமேஸ்வர் வரும் ஜூன் 22ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். எனினும் நீதிமன்றங்களுக்கான கோடை விடுமுறை காரணமாக கடந்த மே 18ஆம் தேதியுடன் அவருக்கான கடைசி பணிநாள் முடிந்து போனது.
தனது கடைசி பணிநாளின்போது வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் செலமேஸ்வர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஏதாவது தவறாக நடப்பதாக உங்களுக்குத் தெரிந்தால், அதை நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். முன்னாள் நீதிபதிகள் என்னை அழைத்துப் பாராட்டும்போது, நீங்களும் பேசுங்கள் என்று நான் அவர்களிடத்தில் வலியுறுத்துவேன்” என்று கூறினார்.

சத்திஸ்கார் நக்சலைட் தாக்குதல் : 6 பாதுகாப்பு படையினர் உயிரழப்பு!

நக்சலைட் தாக்குதல் : 6 வீரர்கள் பலி!
மின்னம்பலம்: சத்தீஸ்கர் மாநிலத்தில்
நக்சலைட்டுகள் இன்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர் என போலீஸ் அதிகாரி டிஐஜி ரத்தன் லால் டங்கி தெரிவித்துள்ளார்.
நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியின் சோல்னார் கிராமத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர்.
இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தண்டேவாடா டிஐஜி ரத்தன் லால் டங்கி, “கிரந்துல் மற்றும் சோல்னார் கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சோற்றைப் பறிககும் ஆதார்!.. மானியத் திட்டங்களின் உதவியைப் பலர் இழந்துள்ளனர்.

சோற்றைப் பறிக்கும் ஆதார்!மின்னம்பலம்: ஆதார் குறைபாடுகளால் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஐடி இன்சைட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், "பல்வேறு மானியத் திட்டங்களுடன் 12 இலக்க ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளில் உள்ள குறைபாடுகள், ஆதார் அட்டை இல்லாமை போன்ற காரணங்களால் மானியத் திட்டங்களின் உதவியைப் பலர் இழந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களின் கிராமப்புறங்களில் மட்டும் ஆதார் எண் இணைக்கப்படாமலும், இதில் உள்ள குறைபாடுகளால் 20 லட்சம் தனிநபர்கள் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டும் உள்ளனர்.

மாட்டைக்கொன்றதற்காக ஒருவர் அடித்துக் கொலை! மத்திய பிரதேசத்தில் இந்துத்வாக்கள் வெறியாட்டம்


மின்னம்பலம்: மத்தியப் பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தில் மாட்டைக் கொன்றதாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் இருந்த மற்றொருவரும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார் என அந்த மாவட்டத்தின் போலீஸ் அதிகாரி அரவிந்த் திவாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சத்னா மாவட்டத்தில் இன்று (20.05.2018) பத்திரிகையாளர்களிடம்  பேசிய அரவிந்த் திவாரி கூறுகையில், சத்னா மாவட்டத்திலிருந்து70 கிமீ தொலைவிலுள்ள அஞ்சர் என்ற கிராமத்தில் மாட்டிறைச்சிக்காக சிராஜ் என்பவர் (வயது 40)மாட்டைக்கொல்லப்போவதாக குற்றவாளியான
பவான் சிங்கிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் அவர் அங்கு 3 பேரைக் கூட்டிச்சென்றுள்ளார் . அங்கு இருந்த சிராஜை
பவான் சிங்கும் அவருடைய கூட்டாளிகளும் சேர்ந்து அடித்தே கொன்றுள்ளனர்.

மெரினா அருகே ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணி!

merinaநக்கீரன் -;கதிரவன் - ஸ்டாலின்:
சென்னை மெரினா கடற்கரை அருகே இலங்கை போரில் இறந்த ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் பேரணி நடைபெற்றது.  இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி, தெகலான்பாகவி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன. ஆனால், மெரினா பொழுதுபோக்கு இடம். இங்கு போராட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று ஐகோர்ட் உத்தரவை காரணம் காட்டி காவல்துரை அனுமதி மறுத்தது.
தடையை மீறி கூட்டம் கூடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக மெரினா, சேப்பாக்கம் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக! 271 எம்பிக்களே உள்ளனர் .. 272 எம்பிக்கள் தேவை .. கர்நாடக விளையாட்டால் முதலுக்கே மோசம் ..

BJP loses its majority in Lok Sabha after Yeddy and Sri Ramulu resignation 
கர்நாடக எம்எல்ஏக்கள் ஸ்ரீராமுலு, எடியூரப்பா இருவரும் தங்களது நாடாளுமன்ற எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் தற்போது பாஜக கட்சியின் பலம் 271 இருக்கிறது. மொத்தமாக அவைத்தலைவரையும் சேர்த்து 271 பேர் தான் இருக்கிறார்கள். பெரும்பான்மைக்கு 272 பேர் தேவை.
tamil.oneindia.com : பெங்களூர்: கர்நாடகாவில் வெற்றிபெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு இருவரும் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. 
கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.இதனால் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். 30 வருடங்களுக்கு பின் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து கொண்டே வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி படுதோல்வி அடைந்தது. கடந்த 4 வருடங்களில் நடந்த பல நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக வரிசையாக தோல்வி அடைந்துள்ளது.

நான் ஏன் நிர்வாண மாடலானேன்?" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை

BBC : (மராத்தி திரைப்படமான 'Nude', தனலட்சுமி மணி முதலியார் என்ற பெண்மணியின் கதை.
அவர் ஒரு கலைக்கல்லூரிக்கு நிர்வாண மாடலாக பணிபுரிகிறார். இப்படமானது அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த திறந்த விவாதத்தை கிளப்பியுள்ளது.</ தனது கதையை அவரே விளக்குகிறார்.r /> எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம்.
என் பெற்றோருக்கு படிப்பறிவு கிடையாது. குப்பை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். சில நேரங்களில் எங்களை தெருக்களில் பிச்சை எடுக்கவும் அனுப்பி வைத்தனர்.
சில நாட்கள் கழித்து, நாங்கள் தாராவி குடிசைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தோம். ஏழ்மை எங்களை வாட்டியது. அதன் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை.

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டி

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மதிப்போம் - திருச்சியில் குமாரசாமி பேட்டிமாலைமலர்" காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என திருச்சி விமான நிலையத்தில் மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். திருச்சி: கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி வருகிற 23-ம் தேதி முதல் மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.& 38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது.
இதற்கிடையே, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு அவர் இன்று வருகை தந்து கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், திருச்சி வந்த குமாரசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் என தெரிவித்துள்ளார்.

திராவிட பிதா பண்டிதர் அயோத்திதாஸர் பிறந்த நாள்

அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 –மே 4, 1914) தென்னிந்தியாவின்
முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார்.திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார்.[2] 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர். பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.
Adv Manoj Liyonzon : பண்டிதர் அயோத்திதாஸ் அவர்களை திராவிட பிதா என்றழைக்க காரணம் அவர் தனது மானுடவியல் ஆராய்ச்சியின் மூலம் நாம் எல்லோரும் திராவிடர்கள் என்கிற பதத்தை நமக்கு அறிமுகம் செய்தபடியால் தான்

சேலம் பசுமை சாலைக்காக 6400 மரங்கள் வெட்டப்படும்”: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ...

thetimestamil.:சென்னையிலிருந்து சேலம் வரை அமையவிருக்கும் ‘பசுமை
சாலை’க்காக சுமார் 6400 மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் சமர்பிக்கப்பட்ட நிபுணர்களின் மதிப்பிட்டு அறிக்கையில் இந்தத் தகவல் சொல்லப்பட்டுள்ளது.
ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழி சாலையாக அமையவுள்ள 277 கி.மீட்டர் சாலை அமைப்பு பணிகளுக்காக 2,560 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் தொடங்கி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாக அமையவுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்தத் திட்டத்தால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் என கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 120 ஹெக்டர் அளவில் காடுகள் அழிக்கப்படும் என தெரிவந்துள்ள நிலையில், திட்டம் அமலாக்கப்பட்டால் அது மிகப்பெரும் சூழலியல் பேரரழிவாக அமையும் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வெட்கங்கெட்ட வல்லரசாக இந்தியா உருப்பெறுமா?

மின்னம்பலம்: பா.சிவராமன். : கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும் - 4
அதிக வளர்ச்சி வேலைவாய்ப்பையும் கூலியையும் அதிகரிக்கும் என்பது பண்டைய கருத்து. ஆனால், 2014-15க்குப் பிறகு, கிராமப்புறப் பகுதிகள் அதிக வளர்ச்சியைக் கண்டாலும் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது. கிராமப்புற நிகர உற்பத்தி ஆண்டுக்கு 7.45% வளர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு -0.28% என்ற எதிர்மறையான விகிதத்தில் வளர்ச்சியுற்றது. அதாவது குறைந்திருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பு உண்மையில் சுருங்கியது என்பதை ரமேஷ் சந்த்தின் விவாதத்துக்கான அறிக்கை காட்டுகிறது.
பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக மோடியால் நியமிக்கப்பட்ட சுர்ஜித் பல்லா அவர்கள் சமீபத்தில் தவறாகக் கருத்து தெரிவித்து எசகுபிசகாக மாட்டிக்கொண்ட சர்ச்சையும் கிராமப்புற வேலைவாய்ப்பு நெருக்கடியை வெளிச்சமிட்டுக் காட்டியது. கிராமப்புறத் தொழிலாளர் நெருக்கடியில் கிராமப்புற வேலைவாய்ப்பு நெருக்கடி ஆற்றும் பங்கு கொஞ்சநஞ்சம் அல்ல. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிப்பதற்கான மையத்தின் (Centre for Monitoring Indian Economy/CMIE) புள்ளிவிவரங்களின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டு 1.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக சுர்ஜித் பல்லா கூறினார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி: மு.க.ஸ்டாலின்

திமுக - காங்கிரஸ் கூட்டணி: மு.க.ஸ்டாலின்
மின்னம்பலம் :புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகளுடன் நேற்று கலந்தாய்வு நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறியுள்ளார்.
தமிழகம் முழுக்க அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து அறிவாலயத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்திய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று (மே 19) புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, காரைக்கால் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்காக, நேற்று முன்தினம் அவர் புதுச்சேரிக்குள் வந்தபோது, ஜிப்மர் மருத்துவமனை அருகே ஸ்டாலினுக்கு வரவேற்பளித்தனர் அம்மாநில திமுக நிர்வாகிகள். புதுச்சேரி வடக்கு மாநிலச் செயலாளர் எஸ்.பி.சிவக்குமார், தெற்கு மாநிலச் செயலாளர் சிவா, காரைக்கால் நாஜிம், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொன்முடி உட்படப் பலர் அங்கிருந்தனர்.

கியூபா விமான விபத்து - 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

cubaவெப்துனியா: கியூபா விமான நிலையத்திலிருந்து 114 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து 105 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்களுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயங்கர விபத்துக்கு ஆளானது.விரைந்து வந்த மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கோர விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில் நுட்பக் கோளாறே இந்த விபத்திற்கான காரணம் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடியுரப்பா அடித்த கொள்ளைகள் விபர பட்டியல்

Thamizh Inian : இவர்தான் எடியூரப்பா!
எடியூரப்பா யார்? மகன் - மருமகன்களுக்கு கோடிக்கணக் கான அரசு நிலங்களை ஒதுக்கியது, மத்திய அரசு கையிலெடுத்து நடத்த வேண்டிய மாபெரும் கனிமவள சுரங்கங்களை தனியார் சட்டவிரோதமாக எடுக்க ஆதரவு கொடுத்தது, அதன் மூலம் ரொக்கம் மற்றும் நிலம், நகைகள், பங்குப் பத்திரம், என ரூ.25ஆயிரம் கோடிகளுக்கு மேல் பெற்றது, இவை அனைத்தும் லோக் ஆயுக்தா விசாரணையில் சான்றுகளோடு ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட ஊழல் பட்டியலில் உள்ளது. இதனால் ஆட்சியை இழந்து சிறைக்குச் சென்றவர் தான் இந்த எடியூரப்பா!!!
எடியூரப்பாவின் ஆட்சிக் காலத்தில் அமைச் சரவையில் இடம் பெற்றிருந்த ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து அரசு அனுமதி பெறாமல் சீனாவிற்கு இரும்புத்தாதுக்கள் கொண்ட மணலை கப்பல் கப்பலாக அனுப்பி வைத்தனர். இதன் மூலம் சுமார் ரூ.30,000 கோடிகளுக்கு மேல் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருநாடக் லோக் ஆயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ஊழல் பணம் மட்டும் ரூ.16,000 கோடிகள் எடியூரப்பாவிற்குக் கைமாறியிருக்கிறது. லோக் ஆயுக்தா வெளியிட்டுள்ள பட்டியலில் ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு நிலம், பணம், நகைகள், பங்கு பத்திரங்கள், வைப்புத்தொகை போன்ற பலவகைகளில் கையூட்டு கொடுத்த விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ஆம் அத்தி யாயத்தில், எடியூரப்பா குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிட மிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளன. இதனடிப்படையில், எடியூரப்பாவின் மீது முதல்தகவ லறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. எடியூரப்பா செயலக அதிகாரிகள் 784 பேருக்கு கோடிக்கணக்கில் பணம், பங்களா - வீடுகள், மற்றும் தங்க வைர நகைகள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. இதன் விவரங்களும் சந்தேஷ் ஹெக் டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

பாஜகவின் அழுவாச்சி காவியம் ... ஆபத்துக்கு அறிகுறி ...?

Swathi K : எட்டியூரப்பா மெஜாரிட்டி இல்லாததால் பதவி விலகல்.. ஒரே
அழுகாட்சி நாடகம் கர்நாடக சட்டசபையில்..
என்னங்கடா ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போனதுக்கே இப்படி டயலாக் விடுறீங்க.. இத மாதிரி 6 மாநிலத்தில் நீங்கள் செய்தீர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில்.. 1% வோட்டு இல்லாமல் தமிழ்நாட்டை ஆண்டு வருவது எல்லாம் எந்த கணக்கு..
ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும்.. வெற்றிகள் பிஜேபிக்கு திமிரையும்.. தோல்விகள் அதிகமான கிரிமினல்தனத்தையும் தான் இதுவரை கொடுத்து இருக்கிறது.. இனி தான் எதிர் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..