விசாரிக்க உத்தவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, அக்.4- தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்து ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகில இந்திய நுகர்வோர் மற்றும் லஞ்சம், குற்றம் ஒழிப்பு அமைப்பின் தலைவராக இருக்கிறேன். சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணம் பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்து பதில் பெற்றுள்ளேன்.
திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து 31.12.2006 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்மத அம்பு சினிமாவை பார்ப்பதற்காக கொளத்தூரில் உள்ள ஸ்ரீகங்கா திரையரங்குக்கு சென்றேன். அந்த திரையரங்குக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணம் ரூ.85 ஆகும்.
சென்னை, அக்.4- தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்து ரூ.1,000 கோடி அளவுக்கு மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அகில இந்திய நுகர்வோர் மற்றும் லஞ்சம், குற்றம் ஒழிப்பு அமைப்பின் தலைவராக இருக்கிறேன். சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணம் பற்றி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்து பதில் பெற்றுள்ளேன்.
திரையரங்குகளில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து 31.12.2006 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்மத அம்பு சினிமாவை பார்ப்பதற்காக கொளத்தூரில் உள்ள ஸ்ரீகங்கா திரையரங்குக்கு சென்றேன். அந்த திரையரங்குக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணம் ரூ.85 ஆகும்.














