சனி, 18 ஜூலை, 2026

Delimitation மசோதா- ராகுல் காந்திதான் இந்தியாவின் லேட்டஸ்ட் சாபக்கேடு ! திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....

 Sowmian Vaidyanathan :   Delimitation  மசோதா... அதாவது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
இது தான் இன்றைய ஒட்டுமொத்த தவெக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே கேள்வி அல்லது பதற்றம் அல்லது பயம் என்றே கூட சொல்லலாம். 
காரணம் இந்த மசோதாவுக்கு திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அல்லது வெளிநடப்பு செய்தோ அல்லது நடுநிலை காத்தோ இருந்தால் தான் வெற்றிபெற்று சட்டமாகும் என்கிற நிலை.


இந்த மசோதா உருவான போது அதை அகில இந்திய அளவில் முதன்முறையாக கண்டுணர்ந்து மிகக் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் எல்லாம் நடத்தி... இந்த மசோதாவால் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்களையும் அநீதிகளையும் புட்டுப் புட்டு வைத்து, நாடு முழுவதும், முக்கியமான ஐந்து பெரிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்க்கும் சூழ்நிலையை உருவாக்கியது திமுக மட்டும் தான். 


இந்த விவகாரத்தில், காங்கிரஸோ, கம்யூனிஸ்டுகளோ சிம்பிளான அறிக்கைகளோடு வேறு எந்த ஆணியையுமே புடுங்கவில்லை. திமுக என்ற ஏவலாளி அல்லது ஏமாளி இருக்கிறான், நமக்காக களமாடுவதற்கு என்று எண்ணி கைகளைக் கட்டிக் கொண்டு தேவைப்படும் போது மட்டும் "ஸ்வாகா" சொல்லிக் கொண்டிருந்தனர். 
அடுத்ததாக இந்த மசோதாவை மகளிர் இடஒதுக்கீடோடு சேர்த்து அதன் பின்னனியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தபோது, திமுக எதிர்த்து வாக்களித்ததால் இது தோற்றுப் போனது. 
அந்த மசோதாதான் இப்பொழுது மீண்டும் வருகிறது. இப்போ தான் "கடவுள் இருக்கான் கொமாரு" கதையே துவங்குகிறது. அதாவது காங்கிரஸ் மற்றும் அதன் தமிழக கூட்டணிக் கட்சிகள் மீது கொலை காண்டில் இருக்கும் திமுக இந்த மசோதாவை ஆதரித்தால், அது சட்டமாகிவிடும். அப்படி சட்டமானால், அத்தோடு சேர்த்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் சட்டமாகிவிடும்....
இதெல்லாம் நடந்தால் காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்குமே ஆயுள் குறைந்து விடும் என்பதோடு, இன்னும் பலப்பல சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதாலும், இந்த மசோதா வெற்றியானது காங்கிரஸுக்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தான் இன்றைய நிலை..!
இதற்காகத் தான் காங்கிரஸும் அதன் தமிழ்நாடு கூட்டணிக் கட்சிகளும்... நேரடியாகவும், தவெக இவர்கள் பின்னால் நின்று கொண்டு தூண்டி விட்டும், திமுக இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் திமுக தலைவர் முத்துவே கருணாநிதி ஸ்டாலின் அவர்களோ, தங்கள் எம்பிக்களிடம், காங்கிரஸை துரத்தித் துரத்தி அடியுங்கள் என்று தெள்ளத்தெளிவாக உத்தரவிட்டுள்ளார். 
தமிழ்நாடு, தமிழர்கள், மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களில் திமுகவுக்கு வேறு யாருடைய பிராண்டும் தேவையில்லை... திமுக இருக்கின்ற கூட்டணி தான் இந்த விவகாரங்களில் மட்டுமல்லாது, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமரசமில்லாத போராளிக் குழு என்ற நம்பகத்தன்மையையும் பெறும். இதையெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை, சம்பந்தப்பட்ட மக்கள் அனைவரும் இதை நன்றாக உணர்வார்கள். 
இந்தியா கூட்டணி கட்சியினர் எழுதிய எஸ் ஐ ஆருக்கு எதிரான கடிதத்தில் திமுக கையெழுத்திட்ட நிலையில்... அமைச்சர் பதவிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காங்கிரஸால் தவெகவிடமிருந்து கையெழுத்து பெற முடிந்ததா..? முஸ்லிம் லீக்கோ, கம்யூனிஸ்டுகளோ, விசிகவோ அதற்கான அழுத்தத்தை தவெகவிடம் வைக்க முடிந்ததா?
அப்படிச் செய்தால் அமைச்சரவியில் இருந்து நடிகர் விஜய் உதைத்துத் தள்ளிவிடுவார் என்ற அச்சமா? அல்லது கொடுத்த சோஃபாவை திரும்பக் கேட்பார் என்ற பயமா?
இப்பொழுது மட்டும் திமுகவிடம் மட்டும் இந்த விவகாரத்தில் இவர்கள் அழுத்தம் கொடுப்பதன் காரணம் என்ன..?! திமுக இளித்தவாயர்கள் உள்ள இயக்கம் என்ற எண்ணமா..?!
நேருவில் இருந்து இந்திரா காந்தி தொடர்ந்து ராஜீவ் காந்தி வரையிலும் திமுக எதிரியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்களுக்கு திமுகவின் பலம் தெரியும். சோனியா காந்திக்கும் திமுகவின் பலம் தெரியும். ஆனால் ராகுல்காந்தி திமுகவை எதிரியாகப் பார்த்ததில்லை... இனிமேல் பார்ப்பார். இனி அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கோதாவில், மாநிலக் கட்சிகளை கதம் செய்யும் வேலையை கெத்தாகச் செய்ய முடியாது. 
திமுகவின் கோரிக்கைப் படி, மக்கள் தொகை அடிப்படையில் என்று இல்லாமல், இந்த மசோதா அனைத்து மாநிலங்களுக்குமே ஐம்பது சதவிகித எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வை அளித்தால் நிச்சயமாக திமுக அதற்கு ஆதரவாகத்தான் வாக்களிக்கும். 
Issue base இல் தங்கள் நிலைப்பாட்டை எடுப்போம் என்று திமுக தலைவர் அறிவித்து விட்டார். ஆனால் எந்த Issue ஆக இருந்தாலும் காங்கிரஸை எதிர்ப்போம் என்றும் அறிவித்து விட்டார்..!
ஸோ... புரிஞ்சவன் பிஸ்தா..!
சௌமியன் வைத்தியநாதன் / 18-07-202

கருத்துகள் இல்லை: