வியாழன், 17 பிப்ரவரி, 2022

ABVP ரவுடி கும்பல் மீது மேலும் புதிய வழக்குகள் போலி விலாசம் கொடுத்து அடாவடி

ABVP ங்கறது மாணவர்கள் அமைப்பு எனும் போர்வையில் செயல்படும் RSS ன் அறிவிக்கப்படாத ஒரு கலவர ரவுடி கும்பல்...
டெல்லி, மஹாராஷ்ரா, உ.பி, குஜராத்னு வடமாநிலங்களில் தொடங்கி, தற்போது கர்நாடகா வரை எல்லா மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் ங்கற பேர்ல மதக்கலவரத்தை தூண்டுவதுதான் இவர்களின் முக்கிய பணி...
இவர்கள் செய்யும் வன்முறைகளை அந்த மாநில காவல்துறை கண்டுக்காது என்பதோடு, அவர்களின் கலவர வன்முறைகளுக்கு அந்த மாநில காவல்துறையும் மறைமுகமாக சல்யூட் அடித்து துணை நிற்கும்...
அந்த தெனாவட்லதான், லாவண்யா தற்கொலை விசயத்தை மதக்கலவரமா மாத்த வடநாட்டுலேருந்து வந்த ஒரு 30 குந்தாணிகள் முதலமைச்சரோட வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் பண்ண,
நம்ம தமிழ்நாடு போலீஸ் மொத்த குந்தாணிகளையும் அலாக்கா தூக்கி 15 நாள் ரிமாண்ட் பண்ணி புழல் சிறைல மூனு நாளா களி திங்க வச்சிட்ருக்கு..
இதுல ஹைலைட் என்னனா,
நம்ம போலீஸ் இந்த குந்தாணிகளை கைது செஞ்சப்போ, அதிர்ச்சி ஆகி, இவங்களை இங்க எறக்கின நம்ம ஆடு அண்ணாமலைக்கு போன் பண்ண,
நம்ம ஆடு, ஒன்னும் பயப்படாதீங்க, இதுலாம் இங்க ஒரு சாதாரண நடைமுறைதான், கைது பண்ணி ஏதாச்சும் ஒரு கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டு போய், சாப்பாடு வாங்கி குடுத்து, சாயங்காலம் வரை வச்சிருந்துட்டு, விட்ருவாங்கனு சொல்ல,
அப்ப சரி, அப்ப சரினு நம்ம குந்தாணிங்க சமாதானம் ஆகியிருக்காங்க...
வழக்கு பதிய கைது பண்ணவங்களோட டீடைல்ஸை நம்ம காவல்துறை விசாரிக்க,
எப்டியும் சும்மா கொஞ்சநேரம் ஏதாச்சும் மண்டபத்தில் வச்சினு இருந்துட்டு சாயங்காலம் நம்மள விட்ற போறாங்க, இதுக்கு எதுக்கு நம்மளோட ஒரிஜினல் தகவல்களை சொல்லனும்னு நெனச்ச குந்தாணிகள்,
தங்களோட பேரு, ஊரு, விலாசம், அப்பா பேருனு எல்லாத்தையும் பொய், பொய்யா சொல்லியிருக்காங்க...
நம்ம போலீஸ் அவங்க குடுத்த எல்லா டீடைல்ஸையும் செக் பண்ணி பாத்துட்டு,
இன்னிக்கு அவங்க முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு கைதான வழக்குல ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு வந்தப்போ,
நீதிபதிகள் நம்ம போலீஸ்கிட்ட இவங்கள ஜாமீன்ல விடலாமானு கேக்க,
அதுக்கு நம்ம போலீஸ்,
இவங்களுக்கு இந்த கேஸ்ல ஜாமீன் குடுக்கறதபத்தி அப்பாலிக்கா பேசிக்கலாம் மைலார்ட்...
இவங்க குடுத்துருக்கற பேரு, ஊரு, விலாசம் னு எல்லா தகவல்களுமே பேக், அதனால இவங்கள 420 வழக்குல புதுசா கைது பண்றோம்னு சொல்லி, புதுசா நாலஞ்சு செக்சன போட்டு, திரும்பவும் கைது பண்ணி, பொடனிலயே அடிச்சி, மொத்த குந்தாணிகளையும் இழுத்துட்டு போயிட்டாங்க...

நன்றி  நாட்டுப்புறத்தான் நாட்டுப்புறத்தான்

கருத்துகள் இல்லை: