ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

உண்மையான தமிழ் தாத்தா ஜி.யு.போப் ..உ வேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து.... தமிழ் காத்த George Uglow Pope

May be an image of 1 person

Sundar P  :  முதல் தமிழ் தாத்தா ஜி.யு.போப் ...(ஜார்ஜ் உக்லோ போப்.)
உவேசா-வுக்கும் முன்பே, ஊர் ஊராக அலைந்து, சுவடிகள் திரட்டி புறநானுறை பதிப்பித்த ஜியு போப்தான் முதல் தமிழ் தாத்தா.
உவேசா 1894 ல் புறநானூறை இரண்டாம் பதிப்பு செய்தார்.
ஆனால் ஜியு போப் 1886 ல் முதல் பதிப்பு செய்தார்.
ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கு அருந்தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப்.....
அவரைப் பற்றி:
• கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் 1820-ல் பிறந்தவர்.
• தந்தை வணிகர். இவர் குழந்தையாக இருந்தபோது குடும்பம் இங்கிலாந்துக்கு குடியேறியது.
• ஹாக்ஸ்டன் கல்லூரியில் பயின்ற பிறகு, சமயப் பணிக்காக 1839-ல் தமிழகம் வந்தார்.
• கப்பலில் பயணம் செய்த அந்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.


• தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் ஆரியங்காவுப் பிள்ளை, ராமானுஜக் கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.
• தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றார்.
• தஞ்சை, உதகமண்டலம், பெங்களூரு நகரங்களில் சமயப் பணியோடு, கல்விப் பணியும், தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.
• மேலைநாட்டு மெய்ஞானிகளின் கருத்துக்கள் திருவாசகத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்.
• இந்தியாவில் பல பள்ளிகீகூடங்களைத் திறந்து லத்தீன், ஆங்கிலம், ஹீப்ரு, கணிதம், தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்தார்.
• இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு பேராசிரியராக பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
• 1886-ல் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
• அதே ஆண்டில் திருக்குறளை ‘Sacred Kural’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
• புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் ஆகியவற்றைப் பதிப்பித்தார்.
• நாலடியாரையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
• தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என்ற பெயரில் 3 பாகமாக எழுதினார்.
• தமிழ்ப் புலவர்கள், தமிழ்த் துறவிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.
• இவரது நூல்கள் பல பதிப்புகள் வெளிவந்தன. பழைய தமிழ் நூல்களைத் தேடித் தேடிப் படித்தார்.
• பழைய ஏட்டுச் சுவடிகளை சேகரித்தார்.
• தமிழ்ச் செய்யுள்களை தொகுத்து ‘செய்யுட்க்கலம்பகம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.
• ராயல் ஏஷியாடிக் சொசைட்டி இவருக்கு தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது.
• கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலையும் இளம் பெருவழுதி எழுதிய ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
• இவர் தமிழுக்கும் சைவ சமயத்துக்கும் ஆற்றிய அருந்தொண்டு அளப்பரியது.
• திருவாசகத்தின் மீதான இவரது காதல் அபரிமிதமானது.
தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதிவிட்டுதான் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் தமது எண்பத்து எட்டாவது வயதில் 1908-ல் மறைந்தார்.
இங்கிலாந்தின் மத்திய ஆக்ஸ்போர்டு பகுதியில் உள்ள செயின்ட் செபல்கர் தோட்டத்தில் இவரது கல்லறை உள்ளது.
‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று தனது கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்த ஆசை ஏனோ நிறைவேறவில்லை.
 11 பிப்ரவரி, ஜியூ போப் நினைவு நாள்.

கருத்துகள் இல்லை: