ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

ராமானுஜரின் 216 அடி உயர சிலை - மோடி திறந்து வைத்தார் . Telangana CM சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார்

மாலைமலர் : ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் குறித்த 3D விளக்கக்காட்சியும் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
ஐதராபாத்:ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.
வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா ஆசிரமத்தைச் சேர்ந்த ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமிகளால் பஞ்சலோகத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.



பிரதமர் மோடி இன்று சிலையை திறந்து வைத்து நாட்டுடமையாக்குகிறார். நிகழ்ச்சியின் போது, ராமானுஜரின் வாழ்க்கை பயணம் மற்றும் போதனைகள் குறித்த 3D விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்படும், மேலும் சிலையைச் சுற்றியுள்ள 108'திவ்ய தேசங்களின் மாதிரிகளை மோடி பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 தினகரன் : மோடி அரசை வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும் : தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆவேசம்
ஹைதராபாத் : ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் பாஜக தூக்கி வீசபட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசு அதிகாரத்தில் பாஜக அகற்றப்பட்டு, வங்கக்கடலில் வீசபட வேண்டும் என்று கூறியுள்ளார். நாட்டிற்கு நல்லது செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ள சந்திர சேகர ராவ், வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

நாடு முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமானால் பாஜகவை தூக்கி வீச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடி மிகவும் குறுகிய எண்ணம் கொண்டவராக உள்ளார் என்று சந்திர சேகர ராவ் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'ஒன்றிய அரசின் பட்ஜெட் ஒரு கோல்மால் பட்ஜெட். அதில் நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை.தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். முன்னேற்றத்திற்கான எந்த அம்சமும் ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை,' என்றார்.

கருத்துகள் இல்லை: