ஞாயிறு, 9 மே, 2021

பெங்களூரு மருத்துவ மனையில் முஸ்லீம் மருத்துவர்கள் மீது பாஜக எம்பியும் எம் எல் ஏயும் அடாவடி

 Sivakumar Shivas  :   பெங்களூருவில் உள்ள மருத்துவ மனையில் 212 மருத்துவர்களும் செவிலியர்களும் பணிபுரிகின்றனர்.
இதில் 17 பேர் முஸ்லிம்கள். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அதிக மருத்துவர்கள் தேவைப்படுகிறது. இதனை அனுசரித்து ஆட்கள் தேர்வு
ஆனால் அங்கு வந்த பெங்களூரு பிஜேபி எம்பி தேஜஸ்வி சூர்யா வரிசையாக முஸ்லிம் பெயர்களை படித்து காண்பித்து 'இதெல்லாம் என்ன?
இவர்களுக்கு பணி நியமனம் செய்தது யார்? அந்த ஏஜென்ஸியை கூப்பிடுங்கள்.
இது மதரஸாவா அல்லது கார்பரேஷனா?' என்று கேட்கிறார்.
200 பேரில் 17 பேர் முஸ்லிம்கள் பணிபுரிவதை கூட சங்கிகளால் பொருத்துக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு மருத்துவ துறையிலும் மதத்தை புகுத்தி மக்களை பிளவுபடுத்தப் பார்க்கும் சங்கிகள் உண்மையில் தேசப் பற்றாளர்களா?
நோயாளிகளை காக்க அரசும் தவறி விட்டது. இவ்வாறு ஆர்வமுடன் பணிபுரிய வரும் மருத்துவர்களை மதத்தை காட்டி தூரமாக்கினால் இறந்து போகும் உயிர்களுக்கு யார் பொறுப்பு?
கொரோனாவால் இறக்கும் உயிர்களை சொந்தங்களே கைவிடும்போது முஸ்லிம்கள் தானே அனைத்தையும் செய்கின்றனர்?
பல அரபு நாடுகள் ஆக்சிஜன் உதவி புரிகிறதே? அதனை எல்லாம் தேஜஸ்வி வேண்டாம் என்று ஒதுக்கத் தயாரா?

கருத்துகள் இல்லை: