திங்கள், 8 பிப்ரவரி, 2021

அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார்.

nakkeeran  : சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்து உள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் குணமானதையடுத்து இன்று காலை சென்னை திரும்ப பெங்களூருவில் இருந்து கிளம்ப இருந்தார். இதையடுத்து அவரது காலில் மீண்டும் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட அவர் இன்னும் சில மணி நேரத்தில் தமிழக எல்லையை அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது

கருத்துகள் இல்லை: