வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் மூலம் தமிழகத்தில் குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்கள் . எம்பிக்கள்????

தமிழகத்திலும் இந்திய அளவிலும் தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தொகுதிகளில் பெற்ற வாக்கு அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் ,கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் என்ற அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் முறை பற்றி அடிக்கடி பெரிதும் புகழ்ந்து பேசப்படுவதுண்டு.
அது பற்றி போதிய விபரங்கள் தெரியாமலேயே அது மிகவும் சிறந்த முறை என்று கருத்துக்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த விகிதாசார தேர்தல் முறை என்பது உண்மையில் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு மிகவும் ஆபத்தான முறையாகும்.
இதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன.
மிகவும் எளிதாக தெரியும் தீர்வுகள் சிலவேளைகளில் பல புதிய சிக்கல்களை கொண்டிருப்பவையாகும்.
Too good to be true என்பது போல் இது ஒரு சிலந்தி வலை என்பதே எனது கருத்து.
உதாரணமாக பிரான்சில் இந்த முறை முன்பு பரீட்சித்து பார்க்கப்பட்டது . அதனால் அந்த நாட்டில் மிகபெரும் இனவாத கட்சி ( Front National) தலைஎடுத்தத்து. அது வரை ஒரு தொகுதி அல்லது இரு தொகுதிகள் மட்டுமே பெற்று வந்த அந்த கட்சி 35 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தது
அதன் பின்பு பிரான்ஸ் அரசானது விகிதாசார முறையயை கைவ்ட்டது.
தமிழகத்தில் விகிதாசார முறை அமுல்படுத்த பட்டால் ..
தமிழகத்தில் பல குஜராத்தி மார்வாடி கேரளா கன்னட ஆந்திர பிகார் ஓடிஸா எம் எல் ஏக்களும் எம்பிக்களும் தெரிவாகும் சாத்தியம் உண்டாகும்.  

எந்த தொகுதியிலும் பெரும்பான்மையாக இல்லாத மார்வாடிகளும் இதர மாநிலத்தை சேர்ந்தவர்களும் முழு மாநில அளவிலான தங்கள் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் அடிப்படையில்,

அவர்கள் தங்கள் மொழிபேசும் எம் எல் ஏக்கள் அல்லது எம்பிக்களை தமிழ்நாட்டில் தெரிவு செய்ய முடியும்.
அவர்கள் தமிழக அரசு மீது தங்கள் அதிகாரத்தை பலவழிகளிலும் செலுத்த அது வழி சமைத்து விடும்


தமிழகத்தின் ஆதாரத்தையே ஆட்டம் காண செய்து விடுவார்கள்.
இன்னும் இது போன்ற பல சிக்கல்கள் விகிதாரார முறையால் ஏற்படும் .
இதில் ஆர் எஸ் எஸ் போன்ற இந்துத்வா மற்றும் இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாதிகளுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துவிடும் ஆபத்தும் உள்ளது.
ஜனநாயக கோட்பாடுகள் நன்றாக வளர்ந்த நாடுகளில் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்வது என்பது வேறு இந்தியா போன்ற தள்ளாடிக்கொண்டு இருக்கும் அரை குறை ஜனநாயக நாடுகளில் இது மிகவும் ஆபத்தான முறையாகும்  
சத்தம் போடாமல் அத்தனை தீவிர வாத குழுக்களுக்கும் ஜாதி குழுக்களுக்கும் மிக பெரும் அரசியல் மேடையை இந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறை கொடுத்து விடும்.
பொன்ராஜ் சீமான் மணியரசன் பழ கருப்பையா போன்ற அரசியல் உதிரிகள் எதை கூறினால் திடீர் விளம்பரம் கிடைக்குமோ அதை பேசுவார்கள்  இந்த விகிதாசார பிரதிநிதித்துவமும் கூட அந்த மாதிரி ஒரு அபினிதான்!

கருத்துகள் இல்லை: