செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தமிழர்களின் கிரானைட் தொழிலை பறித்து மார்வாடிகளிடம் கொடுத்த சகாயம் ஐ ஏ எஸ்! ஜெயலலிதாவின் உத்தரவுகளை நிறைவேற்றினார்!

 Seetha Ravi Suresh : · ஒரேகல்லில் இரண்டுமாங்காய். 750 கிமீ மேற்கு

தொடர்ச்சிமலையை உள்ளடக்கிய தமிழகத்திற்கு, குஜராத்தும், ராஜஸ்தானும் கிரானைட் சப்ளை செய்கின்றன!!!
குஜராத்,ராஜஸ்தான் கிரானைட் வியாபாரிகளுக்கு ஈடுகொடுத்துவந்த தமிழக கிரானைட் வியாபாரம் படுத்து செத்தேபோய்விட்டது.
கலைஞரின் மகன் அழகிரியும், பேரனும்தான் கிரானைட் பிஸ்னஸை, மதுரைல புடிச்சி ஆட்டுறதாக பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
அப்புறம், அழகர் கோயிலே காணாமல் போய்விட்டதுன்னு பிரச்சாரம் செய்யப்பட்டது.
நான்குவருடம் நன்றாக பிரச்சாரம் செய்தபிறகு, ஒருநாள் கொம்பை பிடித்துவிட்டார்கள்.
அதிமுகவின் பைனான்சியர்தான் குற்றவாளி என்றதும்!  அழகிரியை சம்பந்தப்படுத்த, அசுரமுயற்சியே நடந்தது.
குவாரிகளில் ரெய்டு நடத்திய சகாயம், சுடுகாட்ல படுத்து திமுகவை குற்றஞ்சுமத்தினார்.
திமுகவை களங்கப்படுத்தினமாதிரியும் ஆச்சு! கிரானைட் பிஸ்னஸை தமிழர்களிடமிருந்து பிடுங்கி, சேட்டுங்க கைல ஒப்படைச்சமாதிரியும் ஆச்சு!
ஆகமொத்தம், தமிழகத்தின் அன்னாஹசாரே செய்ததெல்லாம், மஹேஸ்வரிகளுக்கும், மக்ரானா உருதுபாய்களுக்குமான பிஸ்னஸ் டெவலப்மென்ட்தான்.
நடிகர் ராஜா தவிர்த்த, தமிழக கிரானைட் பிஸ்னஸ்மேன்கள் எல்லோரும், இன்று மல்ட்டிப்பிள் கட்டரை, 99% குறைந்த விலையில் கயலான்கடைக்கு விற்கும்நிலையில் உள்ளனர்.
நம்ப கம்பெனிக்கு ஸ்டோர் கீப்பர் வேலைக்கு, 8000 ரூபாய் சம்பளத்திற்கு புதுசா வேலைக்குசேர்ந்த 50 வயதான ஒருத்தர், தன்னோட கதையை சொன்னபோது, 2011 வரையில் வருடத்திற்கு 20 கோடி கிரானைட் பிஸ்னஸ் செய்திட்டிருந்தாராம்.
வேலூரில் இன்னமும் கோடவுனும், அலுவலகமும் செச்யூரிட்டிகூட இல்லாமல் வீணே கிடக்கிறதாம். மகளுக்கு கல்யாணம் பண்ணின கடன்தீர்க்க, வேறவழியில்லாம வேலைக்கு வந்திருக்கார்.
சகாயம் தனது எஜமானி ஜெயலலிதாவின் அத்தனை உத்தரவுகளையும், அச்சுபிசகாமல் செய்துமுடித்திருக்கிறார்,  தனது பணிக்காலத்தில்.
மலைகளை சுரண்டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாதுதான்! ஆனால், அதானிகளை நீங்கள் தடுத்துவிட முடியாது, தமிழக இயற்கை ஆர்வலர்களேய்ங்!!!
ஒரேகல்! ஒருகொத்து மாம்பழங்கள் கிடைத்தது வடநாட்டான்களுக்கு! எறிந்தது ஜெயலலிதா! அந்த கல்லுதான் சகாயம் என்கிற சுடுகாட்டுறங்கி!!!

கருத்துகள் இல்லை: