ஞாயிறு, 10 ஜனவரி, 2021

சென்னை மின்சார ரயிலில் உறங்கிக்கொண்டிருந்த பெண் பாலியல் பலாத்காரம்.. ஊழியர்களே கூட்டு.... தாம்பரம்

tamil.samayam.com: தமிழகத்தில் கொரோனா காலத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் நாகப்பட்டினம் அருகே இரவு நேரத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பெண் கோவிலுக்குள் தூக்கி செல்லப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை மின்சார ரயிலில் பயணித்த பெண்ணை ரயில்வே ஊழியர்களே கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூரைச் சேர்ந்தவர் 40 வயதான பெண் கூலி தொழிலாளி. இவர் நேற்று பரனூருக்கு செல்வதற்காக பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறினார். குடிப்பழக்கம் கொண்ட இவர் ரயில் கிளம்பிய சில நேரத்தில் தூங்கிவிட்டதால் பரனூரில் இறங்காமல் அதே வண்டி மீண்டும் சென்னை கடற்கரை வரை திரும்பி வரும்வரை உறக்கத்திலேயே இருந்துள்ளார்.

accused

பின்னர் அந்த ரயில் தாம்பரம் புறப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு பின்னர் அங்குள்ள பணிமனைக்கு சென்றுள்ளது. ரயிலின் எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு ஓட்டுனரும் சென்றுவிட்டார். அப்போது, ரயிலில் இருந்து அந்த பெண்ணை சுதாரித்துக்கொண்ட இரண்டு தற்காலிக பணியாளர்கள் அவரிடம் சென்று பேச்சு கொடுத்தனர். அவரும், நடந்தவற்றை கூறியுள்ளார்.

நம்பியே வந்த காதலி, நண்பனுடன் சேர்ந்து வாலிபர் செய்த கொடுமை..!

ஆனால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இரண்டு பேரும் சேர்ந்து
கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். அதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், பணிமனைக்கு சென்று விசாரித்த போலீசார், அங்கு தற்காலிகமாக வேலை செய்து வந்த அப்துல் அஜீஸ் (30), சுரேஷ் (30) ஆகிய இருவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை: