ஞாயிறு, 10 ஜனவரி, 2021

வடக்கு கொள்ளையர்களை தோலுரிக்க 2G அலைக்கற்று வழக்கு நாடகத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசவேண்டும்

Kandasamy Mariyappan : · வடக்கத்திய கொள்ளை கும்பலின் முகத்தை உலகிற்கு காண்பிக்க... திரு. ஆ. ராசா 2G அலைக்கற்றை பற்றி மீண்டும் மீண்டும் பல தளங்களில் பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும்! 2010ல் 2G ஊழல் என்று ஊடகங்கள் கொக்கறித்த பொழுது, எனது So called Elite நண்பர்களுடன் ஆ.ராசாவை ஆதரித்து, நான் மட்டுமே விவாதம் செய்வேன்! தமிழ்நாட்டு So called intellectuals கும்பலுக்கு வடக்கத்திய கொள்ளையர்களை பற்றி கவலை இல்லை! நீதிமன்றமே ஆ.ராசா குற்றமற்றவர் என்று கூறிய பிறகும்...
பிஹாரிலிருந்து பிழைக்க வந்த எச். ராஜா, 2019 தேர்தல் முடவு வந்தவுடன், இன்னும் 6 மாதத்தில் ஊட்டி பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் வரும் என்றா(ன்)ர்!
இரண்டு வருடங்கள் கடந்து விட்டது!
ஒரு சுயநல கூட்டம், ஜனவரி 2, 2021ல் ஆ.ராசா திகார் சிறையில் இருப்பார் என்றது!
ஜனவரி 2021 முடிய போகிறது!
உச்ச நீதிமன்றம், செல்வி ஜெயலலிதாவை No 1 குற்றவாளி என்று அறிவித்த பிறகும், அந்த தலைவியை வைத்து வாக்கு பிச்சை கேட்கும் அடிமைகள் கூட்டம்...
திமுக ஊழல் கட்சி என்றும், ஆ.ராசா கூடிய விரைவில் சிறை செல்வார் என்றும் உளறிக்கொண்டே இருக்கிறதுகள்!
முதலமைச்சர் திரு பழனிச்சாமி அவர்களை, ஆ.ராசா அவர்கள் விவாதிப்போம் வாருங்கள் என்ற பொழுதும், அவர் வரவில்லை!
திமுக தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் Open Challenge விட்ட பிறகும் முதலமைச்சர் வரவில்லை!
ஆனால் பல அடிமைகள் ஆங்காங்கே வீதியில் நின்று கத்துவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளதுகள்!
இது உங்கள் நேரம்,
பேசுங்கள் ராசா!