திங்கள், 18 ஜூலை, 2016

மதிமாறன் :மர்மம்’ விசாரணையில்தான் இருக்கிறது; சுவாதியின் படுகொலையில் அல்ல

கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதில் எந்தச் சிக்கலும் இருப்பதாய் தெரியவில்லை. மிக எளிதாகக் குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய வழக்கு.
யாருக்கும் தெரியாமல், காட்டில் வைத்து நடந்ததல்ல சுவாதியின் படுகொலை. பகல் நேரத்தில் அதிகம் மக்கள் கூடுகிற பொது இடத்தில் நடந்தது.
கொலைக்காரன் எந்த முகமூடியும் அணியாமல் பதட்டமில்லாமல் கொலை செய்துவிட்டு, அதன் பிறகு‘ம்’ அவன் முகத்தை மறைக்காமல்தான் சென்றிருக்கிறான்.
அதனால் அவனை அடையாளம் காண்பது, அங்கிருந்த கடைக்காரர்களுக்கு மட்டுமல்ல ரயிலுக்குக் காத்திருந்தவர்களுக்கும் எளிது. அப்படியிருக்க அந்தச் சாட்சிகளைக் குறித்து ஊடகங்கள் உட்படக் கள்ள மவுனம் காப்பது ஏன்?
சுவாதியின் செல்போன் முக்கியச் சாட்சி. அது கொலை செய்யப்பட்டவனால் கொண்டு செல்லப்பட்டது. அது கை பற்றப்பட்டிருக்கிறதா?
எளிமையாகக் குற்றவாளியை அடையாளம் காணக்கூடிய இந்த வழக்கு மேலும் சிக்கலாக நகர்த்தப்படுவதுதான் மர்மமாக இருக்கிறதே தவிர. சுவாதியின் படுகொலையல்ல.

கருத்துகள் இல்லை: