15 ஆம் நூற்றாண்டில் வாணிபத் தொடர்புகளுக்காகவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் அரசியல் கைதிகள், அதிகாரிகள், தொழிலார்கள் ஆகவும் தமிழர்கள் மலேசியாவுக்கு குடிப் பெயர்ந்துள்ளார்கள்
18 ம் நூற்றாண்டு தொடக்கம் முதல், மலேசியாவுக்கு குடி பெயர்ந்த தமிழர்கள் தங்கள் தாய்மொழி தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் பேணிக் காத்து இன்று மலேசியத் தமிழர்கள் என்ற தனித்துவத்துடன் ஒரு இனம் உருவாகும் அளவுக்கு வளர்ந்துள்ளார்கள்.
வாணிபத்திற்காக காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை பகுதியிலிருந்து சென்றிருக்கிறார்களாம்.
காவல் துறையினர், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் போன்ற பதவிகளுக்கு இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து சென்றார்களாம்.
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய்த் தொழிலாளர்களாக சென்றவர்கள் நாகப்பட்டினம், நாமக்கல் , கோயமுத்தூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதியைச் சார்ந்தவர்களாம்.
காடுகளில் உள்ள மரங்களை வெட்டி, ரப்பர் பயிரிட்டு, வளர்த்து, பால் எடுத்து, தொழிற்சாலையில் வேலை பார்த்து என்று அனைத்து வகையிலும் தமிழர்கள் உடல்உழைப்பைக் கொட்டியுள்ளார்கள்.
ஆங்கிலேய முதலாளிகளை விட, கங்காணிகளின் கொடூரம்தான் தாங்க முடியாத அளவுக்கு இருந்த போதிலும் சென்ற இடத்தில் தமிழகக் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழியை கட்டிக்காத்து வந்துள்ளார்கள்.
இப்போது மூன்றாம் நான்காம் தலைமுறைத் தமிழர்கள் மலேசியாவில் நல்ல நிலைக்கு வந்து தனித்துவத்துடன் வாழ்வதாகவும் அந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் என்று தனி அடையாளமும் கிடைத்துள்ளது.
இயக்குனர் பா. இரஞ்சித் , உழைக்கும் வர்க்கத்தினர் உறிஞ்சப்பட்டதை எதிர்த்து உருவான தலைவன் தான் கபாலி என்று கூறியுள்ளார். அப்படி என்றால், இந்த ஆவணப் படத்தின் படி அவர்களின் கதைதான் கபாலி
இதோ அந்த வீடியோ…
-இர தினகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக