செவ்வாய், 28 ஜூன், 2016

மரணத்திலும் ஜாதி : சுவாதி கொலை குறித்து ஒய்.ஜி.மகேந்திரன்

(டி.என்.எஸ்) சென்னை நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், இதுவரை குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்காமல் திணறிக்கொண்டிருக்க, அவரை கொலை செய்தது ஒரு இஸ்லாமியர் என்றும், சுவாதி பிராமணப் பெண் என்பதால், அவரது மரணத்திற்கு எதிராக யாரும் குரல் கொடுக்கவில்லை, என்றும் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆதங்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
சுவாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகதால் வெட்டி கொல்லப் பட்டுள்ளார்.

தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதே சுவாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பார், ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும்,
தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள். காம ரேட்டு கயவர்கள் , மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள்/
என்ன செய்வது இறந்தது பிராமண பெண், இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது. செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்???
இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  chennaionline.com

கருத்துகள் இல்லை: