சனி, 12 டிசம்பர், 2015

திருச்சி - மாணவர்களை சித்தரவதை செய்யும் ஆசிரியர்


மாணவர்கள் இருவரை பள்ளியின் ஆசிரியர் அடிக்கும் காட்சி வாட்ஸ் அப்பில் பரவியது. படிப்பியா... படிப்பியா... என இரண்டு மாணர்களை கயிற்றால் அடிக்கிறார். பின்னர் ஒருவர் காதை ஒருவர் பிடித்து உட்கார்ந்து எழுமாறு சொல்லிய ஆசிரியர், மாணவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து அவர்களை காலால் மிதிக்கிறார். இதனை சக மாணவர்கள் பார்த்து தங்களின் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரித்தபோது, திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.nakkheeran,in

கருத்துகள் இல்லை: