வெள்ளி, 11 டிசம்பர், 2015

A.C.முத்தையாவும் படகில் மிதந்தார்...மழைக்கு முன்பாக ஏசியாவது ஒசியாவது...

இயற்கைக்கு முன் அனைவரும் சமம் என்று நிரூபித்தது சென்னையின் மழை வெள்ளம்.  சென்னை கோட்டூர்புரத்தில் வெள்ளம் புகுந்ததால், பங்களா வீட்டை காலி செய்துவிட்டு, மனைவியுடன் படகில் சென்று தப்பினார் ‘ஸ்பிக்’ நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா.;டிசம்பர் 1ம் தேதி, அடையாற்றில் வெள்ளம் அதிகரித்ததால்,  கோட்டூர்புரம் பாலத்துக்கு மேற்கு திசையில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பினரையும், கிழக்குப்புறத்தில் உள்ள தொழிலதிபர் ஏ.சி.முத்தையா வீடு, கோவை லட்சுமி மில்ஸ் குழுமத்தின் விருந்தினர் மாளிகை, 'பர்ஸ்ட் லீசிங் நிறுவன மேலாண் இயக்குனர் பரூக் இரானி வீடு மற்றும் முன்னாள் கவர்னர் சி.சுப்ரமணியத்தின் வீடு மற்றும் போட் கிளப் பகுதியில் இருக்கும் அமெரிக்க துாதரக அதிகாரிகள் வீடு, தொழிலதிபர் என்.சீனிவாசன் மற்றும் சன் குழுமத்தின் கலாநிதி, தயாநிதி ஆகியோரின் வீடுகளும் வெள்ளத்தில் சிக்கியது.ஏ.சி.முத்தையாவின் வீடான, ’அடையார் வில்லா’வில் நீர் புகுந்ததால், அவரும், அவர் மனைவியும், படகில் ஏறி, தப்பிச்சென்றனர்.nakheeran,in 

கருத்துகள் இல்லை: