அப்போது
முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு
அவையில் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் பேசினார். இதற்கு பதிலளித்த
மு.க.ஸ்டாலின், தொடர்ந்து பேச முற்பட்டபோது, அவரை பேசவிடாமல்
ஆளூங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். வீட்டுவசதித்துறை அமைச்சர்
வைத்திலிங்கம், எழுந்து நின்று மு.க.ஸ்டாலினை நோக்கி மிரட்டும் தொணியில்
பேசினார். திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், ஸ்டாலினை தொடர்ந்து பேச
அனுமதிக்கும்படி வலியுறுத்தினார். இதையடுத்து அவரை வெளியேற சபாநாயகர்
உத்தரவிட்டார்.
விவாதத்தின்
போது, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘’பினாமி முதல்வர்’’ என்று ஸ்டாலின்
குறிப்பிட்டதும், அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, நாக்கை துறுத்தி
மிரட்டிகொண்டே, சட்டையை கழட்டிக்கொண்டு, அடிக்கப்பாய்வதுபோல்
நடந்துகொண்டார். உடனே ஸ்டாலின் சட்டை பட்டன்களை அவிழ்த்து மார்பை
திறந்துகாட்டி, ‘’அடிக்கத்தானே பாய்கிறாய், அடி’’ என்று கூறியதும், அதிமுக
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையில் எழுந்து நின்று கூச்சல்,
குழப்பம், அமளியில் ஈடுபட்ட நிலையில், திமுக உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபம்
தெரிவிக்கவே, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்ற
சபாநாயகர் உத்தரவிட்டார்.
வெளியே
வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரவையில் தன்னை பேசவிடாமல்
அமைச்சர் வைத்திலிங்கம் ரவுடி போல் மிரட்டினார் என்று ஸ்டாலின் குற்றம்
சாட்டினார்.
’’இது சட்டமன்றமா? சண்டியர் மன்றமா?’’ என்று திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக