நரேந்திர மோடி. இதனால் ஜோதிடர் பண்டிட் நாதுலால் வியாஸ் வாக்கை தெய்வ வாக்காக கருத தொடங்கினார் ஸ்மிருதி ராணி.இந்தநிலையில் தான், தன்னுடைய வருங்காலம் எப்படி இருக்கும் என்று அறிய ஜோதிடர் பண்டிட் நாதுலால் வியாசை திங்கள்கிழமை அவர் மீண்டும் சந்தித்தார். அவரது ஜாதகத்தை 4 மணி நேரம் கணித்த ஜோதிடர், ஸ்மிருதி ராணி இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவார் என்று கூறியதாக தெரிகிறது.பாஜகவில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க ஸ்மிருதி ராணி எப்படி குடியரசுத் தலைவராக முடியும் என்ற வாதம் ஒருபுறம் இருக்க, ஒரு மத்திய அமைச்சர் 4 மணி நேரம் ஒரு ஜோதிடர் வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு கேட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.">இந்த சந்திப்பு குறித்து ஸ்மிருதியிடம் டிவி செய்தியாளர்கள் சிலர் கேட்டபோது, இன்று உங்களுக்கு நல்ல டிஆர்பி கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிரித்தபடி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்து மீடியாக்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேசமயம், உங்களது தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து என்னை வைத்திருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன் என்றார்.
ஆனால் இதே ஜோதிடர் வியாஸ்தான் முன்பு இராணிக்கு சிறந்த எதிர்காலம் இல்லை என்றும் கணித்தவர் ஆவார். இருப்பினும் பின்னர் இவரே இராணியை அழைத்து நல்ல எதிர்காலம் உள்ளது, மத்தியில் அமைச்சர் ஆவாய் என்றும் வாழ்த்தினார். திங்கள்கிழமையின் சந்திப்பின்போது இன்னும் ஒரு படி மேலே போய், இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு நாள் வருவாய் என்று வாழ்த்தினாராம் வியாஸ்.
இராணியின் இந்த ஜோதிடர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சிவசேனாவின் சஞ்சய் ராத் கூறுகையில், ஜோதிடம் என்பது சாஸ்திரம். யார் வேண்டுமானாலும் அதை நம்பலாம், பின்பற்றலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அதில் குறை கண்டுபிடிக்கவும் தேவையில்லை என்றார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக