வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை? எனவே, “வைகுண்டராஜனை உடனே கைது செய்! அவர் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்!” எனக் கோருகிறோம். வாழ்வாதாரத்திற்காக கூடங்குளத்தில் போராடும் மக்களையும், பிழைப்பிற்காக தாமிரபரணி, வைப்பாறு உட்பட தமிழக ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் ஏழை விவசாயிகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்வதோடு, இரவு 11 மணிக்கு மேல் வியாபாரம் செய்யும் சிறு ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளை அடித்து நொறுக்கியும், மேற்படி கடைகளில் உள்ள போண்டா, வடைகளை பிறந்து பார்த்து, கெட்டுப் போனதாகக் கூறி கடை உரிமத்தையே ரத்து செய்யும் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித குலத்திற்கும் இயற்கை வளத்திற்கும் சவால் விடும் வைகுண்டராஜனை கைது செய்வது இயலாத காரியம்தானோ?
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இயற்கை வளக் கொள்ளைகளை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது. ஆனால், அரசு அதற்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்காத நிலையில் நீதிமன்றம் அரசுக்கு ரூ 10,000 தண்டம் விதித்து மீண்டும் உத்தரவிட்டது. ஆனால், அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. கிரானைட் ஊழலை முதலில் அம்பலப்படுத்தியது சகாயம் ஐ.ஏ.எஸ்தான். பி.ஆர்.பி மீது பல வழக்குகளைத் தொடுத்து, தொழிலை முடக்கி, அவரைப் பல மாதங்கள் சிறையிலும் வைத்தது தமிழக அரசு. இதுவரை கிரானைத் தொழில் முடங்கியுள்ளது.
மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.
வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. நீதிமன்றம் கேட்டும் அறிக்கையை தர அரசு மறுத்து விட்டது. வைகுண்டராஜன் கொள்ளை கடற்கரையோடு நின்று விடவில்லை. உள்நாட்டு மக்களையும் பாதிக்கும் வகையில் செம்மண்ணான தேரிமண்ணையும், பல ஆண்டுகளாக சூறையாடி வருகிறார். இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது நாடார் சமூக மக்களும்தான். இவ்வாறு அனைத்து சமூக மக்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ராஜாங்கத்தை நடத்தி வரும் வைகுண்டராஜன் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது
சகாயம் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டால் கூட மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது. அரசும், அதிகாரிகளும் அதை முடக்குவதற்கு முயற்சிப்பார்கள். ஆகவே, கடற்கரை மக்களின் பல்லாண்டு காலப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் தீவிரமாக போராடினால், தாதுமணல் நிறுவனங்களை மூடி மக்களின் வாழ்வாதார நிலையை பாதுகாக்கலாம். படுவேகமாக ந டைபெறும் அனைத்து இயற்கை வளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்தலாம். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். வெறும் பார்வையாளர் என்ற நிலையில் இல்லாமல் பங்கேற்பாளராக எங்களோடு இணையுங்கள். நம் தாய் மண்ணை கனிம கொள்ளையர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க உங்களை அழைக்கிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு ஏழரை கோடி லஞ்சம்
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு!
சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு!
சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!
தமிழக அரசே
கனிமவளக் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்காதே!
தாதுமணல்-ஆற்றுமணல் கொள்ளைகளையும் விசாரிக்க உத்தரவிடு!
தமிழ்நாட்டை சூறையாடும் அனைத்து கனிமவளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்த போராடுவோம்!
இயற்கை,சுற்றுச்சூழல், தலைமுறைகளைக் காப்பாற்ற களத்தில் இறங்குவோம்!
கனிமவளக் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்காதே!
தாதுமணல்-ஆற்றுமணல் கொள்ளைகளையும் விசாரிக்க உத்தரவிடு!
தமிழ்நாட்டை சூறையாடும் அனைத்து கனிமவளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்த போராடுவோம்!
இயற்கை,சுற்றுச்சூழல், தலைமுறைகளைக் காப்பாற்ற களத்தில் இறங்குவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 29.11.2014, சனிக்கிழமை காலை 10.00 மணி
இடம் : பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, தூத்துக்குடி
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடுஇடம் : பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, தூத்துக்குடி
தூத்துக்குடி – நெல்லை – குமரி மாவட்டங்கள்
9443527613, 9442339260, 9486643116
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக