வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அங்காடிதெரு புகழ் சரவணா ஸ்டோரில் ரெய்டு : வியாபாரம் நிறுத்திவைப்பு!

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் கடைகளில் சோதனை நடைபெற்று வருகிறது. சரவணா குழுமத்தில் உள்ள 17 கடைகளில் 100அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

மேலும் சரவணா குழும உரிமையாளர்கள் வீடுகளும் சோதனைக்கு தப்பவில்லை. வருமான வரி சோதனையைத் தொடர்ந்து வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை: