செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

குகநாதன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்பாட்டம்

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்பாட்டத்தில்  பல பதாகைகளை ஏந்தியவாறு  கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 
இனங்களுக்குள் குரோதத்தை வளர்க்கும் உதயன் போன்ற ஊடகங்கள் புலிகளின் காலத்தில் புலிகளுக்கு வால்பிடித்து தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை மட்டுமல்ல அடிப்படையான வாழ்வு உரிமையை கூட நசுக்கியவர்களாவர்.
  இன்று ஏதோ ஊடக சுதந்திரம் என்றெல்லாம் கோஷம் எழுப்புகிறார்கள். எந்தவிதமான மனித பண்பும் அற்ற வெறும் சுய வர்த்தக அரசியல் லாபம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு ஒரு பத்திரிக்கை இது ஒன்றே போதும் தமிழ் மக்களை மேலும் படு குழிக்குள் தள்ள.
 எந்த ஒரு செய்தியையும் திரிபு படுத்திய தமிழ் மக்களின் மனங்களில் விஷ வித்துக்களை தூவுவதே இந்த உதயன் பத்திரிகையின் தொழில் .
 

கருத்துகள் இல்லை: