ஞாயிறு, 9 மே, 2010

மட்டக்களப்புமும்மாரி பிரதேசத்தில்யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சையடி மும்மாரி பிரதேசத்தில்யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இப்பிரதேசத்தினுள் புகுந்த யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒரு வர் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றொருவர் நேற்றையதினம் மரணமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை: