திங்கள், 3 மே, 2010

அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போரில் அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துக் கொண்ட பரிதாபகர சம்பவம் ஒன்று பதுளை, மடுல்சீமை என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் நாட்டின் யுத்த சூழ்நிலையின் போது கடமையாற்றிய இந்த இராணுவசிப்பாய் மோதல் சம்பவமொன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிகிச்சையின் போது அவருடைய பாதிக்கப்பட்ட காலொன்று அகற்றப்பட்டுள்ளது. அங்கவீனமான மேற்படி நபர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு வந்ததையடுத்து வீட்டிலேயே முடங்கி வாழவேண்டிய நிலையேற்பட்டது சம்பவ தினம் வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீமூட்டிக் கொண்டார் இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயை அணைத்ததுடன் உடனடியாக அவரை பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர் ஆனாலும் அவரது உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மடுல்சீமையை சேர்ந்த ஆர்.எம்.சோமரட்ன என்ற 29வயது நிரம்பிய அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயே மேற்படி மரணமானவராவார் இச்சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: