வெள்ளி, 7 மே, 2010

இலங்கை திரைப்பட விழா வசமாய் மாட்டிக்கொண்டார் மணிரத்னம் பலநாள் ்


இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் என அழைக்கப்படும் கூத்தாடிகள் மறுத்துள்ளனர்
இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை பார்த்து முன்னணி நாயகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்களாம். அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை. காரணம் மேற்குலக நாடுகளில் வாழும் புலிப்பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களின் தயவில் தமது தயாரிப்பு தமிழ் படங்களை விற்பனை செய்து கோடிக்கணக்கான பணத்தினை சம்பாதிக்கும் கூத்தாடிகள் தாம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிக்காட்டுவதற்கான நாடகமே இதுவென தமிழக மக்களில் பலர் கருதுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விவகாரத்தில் வசமாய் மாட்டிக் கொண்டிருப்பவர் டைரக்டர் மணிரத்னம் என்று கூறப்படுகிறது. மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டிருக்கும் விழாக்குழுவினர் மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கை விழாவில் கலந்து கொண்டால் தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணி ரத்தினம்.

கருத்துகள் இல்லை: