சனி, 8 மே, 2010

கிளிநொச்சி மாவட்டத்தில் 3700வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசஅதிபர்

மீள்குடியேற்றத்தை துரிதப்படுததும் வகையில்; கிளிநொச்சி மாவட்டத்தில் 3700வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசஅதிபர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வீட்டு நிர்மாணத் திட்டத்தின்கீழ் 3600 வீடுகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் 100 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை யு.என். ஹெபிட்டாட் சேதமடைந்த 1500 வீடுகளை புனர்நிர்மாணம் செய்துகொடுக்க இணக்கம் தெரிவித்திருக்கின்றது. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 30பாடசாலைகள் தற்போது இயங்கி வருகின்றன. மோதல்களால் இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறியுள்ளோர் இதுவரையில் 5ஆயிரத்து 850ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கையினையும் சிறியளவில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: