திங்கள், 3 மே, 2010

மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை

சென்னை: மலேசிய அரசு கைது செய்துள்ள 75 ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப கூடாது என்று இயக்குனர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்துக்கு கோரிக்கை மனுவை சீமான் தலைமையில் நாம் தமிழர் அமைப்பினர் வழங்குகிறார்கள்.

 மலேசிய காவல் துறையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து தற்போது அவர்களை கோலாலம்பூருக்கு அருகில் உள்ள முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தில் மலேசிய அரசு இருப்பதாக தெரிகின்றது.

கருத்துகள் இல்லை: